Followers

Tuesday, June 3, 2014

பங்குசந்தை


வணக்கம் நண்பர்களே !
                    என்னிடம் இப்பொழுது நிறைய வாடிக்கையாளர்கள் என்று பார்த்தால் அது பங்குசந்தையில் முதலீடு செய்யும் நண்பர்கள் தான் அதிகம் வருகின்றனர். தொழிலுக்கு செய்வது போல் அவர்களுக்கு செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

பங்குசந்தையில் இப்பொழுது மக்கள் நிறைய பணம் மூதலீடு செய்கின்றனர். அது நல்ல விசயம் தான் தங்கத்தில் மூதலீடு செய்து அந்த தங்கம் லாக்கரில் தூங்கிக்கொண்டிருப்பதை விட பணம் பணம் செய்யும் தொழிலில் இறங்குவது நல்ல விசயம்.

பங்குசந்தையில் ஆன்மீகஉதவியா என்று ஒரு சிலர் சிரிக்க கூடும் ஆனால் இந்த தொழிலில் தான் ஆன்மீக பலம் அதிகமாக தேவைப்படும். என்ன தான் திறமை இருந்தாலும் நமக்கு அதிர்ஷ்டம் என்பது கொஞ்சம் இல்லை அதிகமாக இருந்தால் தான் நமக்கு பங்குசந்தையில் லாபம் பார்க்கமுடியும்.

என்னிடம் மிக நெருங்கிய நண்பர்களின் வட்டத்திற்க்கு மட்டும் நான் இந்த உதவியை செய்து வருகிறேன். அவர்களுக்கு அம்மனை வைத்து அதிர்ஷ்டத்தை உருவாக்கி செய்துக்கொடுத்துவருகிறேன். அவர்கள் நல்ல வருமானத்தை பார்க்கிறார்கள். இன்னும் நிறைய விசயங்களை அவர்களுக்கு செய்துக்கொடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். எனது வேகத்திற்க்கு அவர்களின் வேகம் குறைவாக இருப்பதால் தயங்கி தயங்கி செய்துவருகிறேன்.

முதலில் நான் இந்த தொழிலை எடுக்கவேண்டாம் என்று தான் நினைத்து இருந்தேன். நெருங்கி நண்பர்கள் வந்து செய்துக்கொடுங்கள் என்று கேட்டார்கள். நானும் அம்மன் மேல் நம்பிக்கை வைத்து இறங்கிவிட்டேன். ஒரு சின்ன நஷ்டம் கூட வராத அளவிற்க்கு அவர்களை தயார் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவர்களுக்கு செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

நாம் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருந்தால் எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதில் இறங்கி சாதித்து காட்டமுடியும். சவால் நிறைந்த இந்த வேலை இப்பொழுது எனக்கு சர்வசாதாரணமாகிவிட்டது. அதற்கு காரணம் அம்மன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: