Followers

Wednesday, June 18, 2014

விரைய தசா பகுதி 25


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவைப்பற்றி பார்த்து வந்தோம். செவ்வாய்க்கிரகம் மற்றும் புதன் கிரகமும் சேர்ந்து ஒரு நபருக்கு விரையவீட்டில் அமர்ந்து இருந்தது.  அவருக்கு புதன் தசா ஆரம்பித்து நடந்து வந்தது.

அவர் ஒரு விவசாயி. அவரிடம் நீங்கள் எந்த விசயத்திலும் சாட்சி கையெழுத்து போட போகாதீர்கள் என்று சொல்லிருந்தேன். அவரும் சரி என்று சொல்லிருந்தார். அவரின் விதி அவரை விடவில்லை.

கிராமத்தில் பஞ்சாயத்து என்பது இருக்கும். எந்த பிரச்சினையும் பஞ்சாயத்து செய்து பிரச்சினையை தீர்ப்பார்கள். இந்த பஞ்சாயத்துக்கள் எல்லாம் வர வர அழிந்து வருகிறது என்று சொல்லவேண்டும். யாரும் யார் பேச்சையும் கேட்கும் நிலையில் இல்லை என்று சொல்லவேண்டும்.

இன்று பஞ்சாயத்து செய்பவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு நீதியை சொல்லுவதில்லை அநீதியை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இன்று கோர்ட்க்கு அலைவதை விட பஞ்சாயத்து செய்து முடித்தால் நல்லது. நீதி சரியாக சொன்னால் பஞ்சாயத்திலேயே முடித்துக்கொள்ளலாம்.

இவர் அடுத்தவர்க்கு எதற்க்கோ சாட்சி கையெழுத்து போட்டுருக்கிறார். அங்குள்ள வில்லங்கம் பிடித்தவர்கள் இடையில் பத்திரத்தை வைத்து இவரிடம் கையெழுத்தை வாங்கிவிட்டார்கள். இவரின் நிலத்தை எழுதிக்கொடுப்பது போல் செய்துவிட்டார்கள்.

கிராமத்தில் இந்த மாதிரி எல்லாம் நடைபெறுகிறது. கலியுகம் அல்லவா. இவர் கோர்ட்க்கு சென்று அதனை எல்லாம் முடித்துக்கொண்டு வருவதற்க்குள் பாடாதபாடு பட்டுவிட்டார். விரையவீட்டில் செவ்வாய் மற்றும் புதன் இருந்ததால் வந்த வினை இது.

நாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாத பிரச்சினை எல்லாம் கிரகங்கள் நினைத்தால் உடனே வந்து கொடுத்துவிட்டு சென்றுவிடும். உண்மையில் மேலே நான் சொன்ன மாதிரி நடந்தது. இப்படி பல கிராமங்களில் அடுத்தவர்கள் நிலத்தை எடுக்க ஒரு குழு இருந்துக்கொண்டே இருக்கின்றது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: