Followers

Monday, June 9, 2014

பேரனுக்காக தாத்தா செய்வார்


வணக்கம் நண்பர்களே!
                    சூரியனுக்கு நாம் அதிகம் முக்கியதுவம் கொடுப்பது தமிழ்மாதத்திற்க்காக மட்டுமே இருக்கும். சூரியனை சுற்றி கோள்கள் சுற்றி வருவதால் சூரியனுக்கு என்று தனி மரியாதை இருக்கும்.

ஆத்மாக்காரகன் என்று சொல்லும் சூரியன் நன்றாக இருந்தால் நமது ஆத்மா நன்றாக இருந்து அனைத்தையும் பெற்றுவிடலாம். சூரியன் முக்கால்வாசி பேருக்கு நல்ல நிலைமையில் இருப்பதில்லை. சூரியன் பகலில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருக்கும் என்று சொன்னாலும் ஒரு சிலர் பகலில் பிறந்தும் சூரியன் நன்றாக இருப்பதில்லை.

பகலில் பிறந்தவர்கள் பெரும்பாலும் நல்ல தொழில்களை தேர்ந்தெடுத்து செய்வது நல்லது. இரவில் பிறந்தவர்களாக இருந்தால் அரசாங்கம் சாராத தொழிலை செய்துக்கொள்ளலாம்.

நான் சொல்ல வந்த மேட்டருக்கு வந்துவிடுகிறேன். சூரியனை வைத்து எல்லா கிரகங்களையும் நாம் சமாளிக்கமுடியும். நான் சொல்லுவது பரிகாரத்திற்க்காக சொல்லுகிறேன்.

சூரியனை நாம் பிடிக்கவேண்டும் என்றால் அதற்கு ஒரு வழியை நாம் செய்யவேண்டும். எப்பொழுதுமே தந்தைக்கும் மகனுக்கும் சண்டை சச்சரவு இருந்துக்கொண்டே இருக்கும். சூரியனுக்கும் சனிக்கும் எப்பொழுதும் சண்டை நடக்கும். தாத்தாவுக்கும் பேரனுக்கும் நட்பு இருக்கும். தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்று சட்டம் எல்லாம் இருக்கிறது அல்லவா.

பேரனாக இருக்கும் மாந்தியை வைத்து தாத்தாவை சரிசெய்தால் அனைத்து கிரகங்களும் சொல்லுகிறபடி கேட்கும். மாந்தியை வைத்து சூரியனை சரிசெய்யமுடியும். பேரன் என்ன கேட்கிறானோ அதனை தாத்தா செய்துக்கொடுப்பார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Peranukku eppadi ice vaippadhu?