Followers

Thursday, June 5, 2014

ஆன்மீக அனுபவங்கள் 165


வணக்கம் நண்பர்களே!
                    உங்களின் ஆத்மா உங்களுக்கு தெரியாமல் வெளியே சென்று வரும் என்று சொல்லிருந்தேன். அது இரவி்ல் மட்டும் நடைபெறுவது கிடையாது பகலிலும் நடைபெறும். ஆத்மாவிற்க்கு அந்தளவுக்கு சக்தி இருக்கிறது. நீங்கள் இந்தியாவில் நீங்கள் இருந்துக்கொண்டு இருக்கலாம் அப்பொழுது அமெரிக்காவில் ஒரு வேலையை உங்களின் ஆத்மா செய்யும். நீங்கள் இருப்பது இந்தியாவில் ஆனால் ஏதாே ஒரு முக்கிய வேலை அமெரிக்காவில் நடத்திக்கொண்டிருக்கும்.

சித்தர்கள் இப்படி நடத்துவார்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் ஆனால் நீங்களே இதனை நடத்தமுடியும். உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருக்காது. பிறரை நம்புவீர்கள். ஒவ்வொருவருக்கும் இது நடக்கிறது ஆனால் நீங்கள் விரும்பும் நேரத்தில் இதனை செய்யமுடியாது. நீங்கள் விரும்பும் நேரத்தில் இதனை நடத்தவேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் ஆன்மீகவாதியாக மாறவேண்டும்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் உங்களிடம் சொல்லிருப்பார்கள் இரவு உன்னோடு பேசிக்கொண்டிருப்பது போலவே இருந்தது டா என்று சொல்வார்கள். நீங்கள் இரவில் உங்களின் வீட்டில் படுத்துதூங்கிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் உங்களின் நண்பர் ஏதோ ஒரு ஊரில் இருப்பார் அவரோடு நீங்கள் பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்று உங்களின் நண்பர் சொல்லிருப்பார். ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் நீங்கள் இருந்து இருக்கின்றீர்கள். அப்பொழுது நீங்களும் சித்தர்கள் தானே. 

என்ன ஒரு குறை என்றால் நீங்கள் நினைக்கும்பொழுது இது நடைபெறமாட்டேன்கிறது. அதற்கு காரணம் ஆத்மா அதற்கு என்று பழக்கப்படுத்தபடவில்லை என்று தெரிகிறது. ஆத்மாவை அதற்கு என்று நாம் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் நாமும் சித்தர்கள் செய்வது போல் நினைத்த நேரத்தில் அனைத்தையும் செய்துவிடலாம்.

பல நேரங்களில் இதனை பல பேர்க்கு நான் செய்து இருக்கிறேன். என்ன அவர்கள் ஏதாே இது கனவு என்று விட்டுவிடுவார்கள். நல்ல விழிப்புணர்வு ஒவ்வொருக்கும் கிடையாது அது தான் காரணமே தவிர வேறு ஒன்றும் கிடையாது. இந்த விழிப்புணர்வோடு வாழ்க்கையை வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் அற்புதமான நாளாக உங்களின் வாழ்க்கை அமையும். எப்படி விழிப்புணர்வோடு இருக்கலாம் என்பதை அடுத்த பதிவில் சொல்லி தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Next padhivu seekkiram podunga