Followers

Thursday, June 12, 2014

சக்தி பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                     நான் கூட இளம் வயதில் எல்லாம் இதனைப்பற்றி் எல்லாம் நம்பவில்லை. ஆன்மீகபக்கம் வந்து கூட இதனை நம்பவில்லை ஆனால் குரு கிடைத்த பிறகு தான் ஆன்மீகம் என்றால் என்ன என்று தெரியவந்தது.

இன்றைக்கு நான் தொழில் செய்பவர்களுக்கு உதவுகிறேன் என்று சொல்லுவது கூட எனது சக்தியை அவர்களிடம் செலுத்துகிறேன் அது மட்டும் தான் செய்கிறேன். என்னோடு தொழில் தொடர்பு வைத்திருப்பவர்களை கூப்பிட்டு ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு வரச்சொல்லி அவர்களோடு உட்கார்ந்து பேசுவது தான் எனது வேலை. அவர்கள் என்னை சந்தித்துவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்களுக்கு நல்லது நடக்கும்.

என்னிடம் இருந்து வரும் சக்தியை அவர்கள் பெறுகிறார்கள். இது மட்டும் முதல் கட்டத்தில் நடக்கும். அவர்கள் வெற்றியை நோக்கி செல்கிறார்கள். ஒரு சில சாமியார்களிடம் சென்றால் நல்லது நடக்கிறது என்று சொல்லுவது எல்லாம் இந்த சக்தியை நீங்கள் பெறுவது மட்டுமே.

ஒரு சிலர் என்னிடம் வந்து சக்தியை எடுத்துக்கொண்டு செல்லும்பொழுது அவர்களின் உடல் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு இருப்பார்கள். முதலில் மிகவும் சோர்வு ஏற்பட்டுவிடும். எதனையோ பறிக்கொடுத்ததுபோல் இருக்கும் பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஒரு முறை மணிகண்டன் என்பவர் எழுதியிருந்தார் அல்லவா. மிகப்பெரிய சக்தியை உணர்ந்தேன் என்று சொல்லிருந்தார் அல்லவா. அவரால் அதனை உணரமுடிந்தது. அந்த சக்தியை அவர் பெற்றார் அதனால் தான் அவர் எழுதியிருந்தார். இப்படி நீங்களும் பெறமுடியும் அதற்கு நீங்கள் பயிற்சி செய்யவேண்டும்.

உங்களை எல்லாம் நன்றாக தயார் செய்துவிட்டு உங்களுக்கு சக்தி கிடைக்கவேண்டும் என்றால் தாராளமாக என்னை வந்து சந்தித்து பெறமுடியும். பொய் சொல்லிவிட்டு என்னை சந்திக்கிறேன் என்று வராதீர்கள். அது உங்களுக்கு பிரச்சினையாக கூட அமைந்துவிடும். பல ஆன்மீகவாதிகள் என்னிடம் இருந்து சக்தியை பெறுகின்றனர். இதனை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். இதனை சோதனை செய்யவேண்டும் என்றால் பிறரிடம் சென்று கொஞ்ச நாளைக்கு ஆன்மீகப்பயிற்சியை செய்துக்கொண்டு வாருங்கள். வந்த பிறகு என்னை வந்து சந்தித்து பேசுங்கள் அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: