Followers

Thursday, January 9, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் பகுதியில் இரண்டாவது வீட்டை வைத்து பார்த்த வருகிறோம். மேலும் ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இரண்டாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் மறைந்த ஒரு ஜாதகம். மகரலக்கினத்தை வீடாக கொண்ட ஒரு ஜாதகம். மகர லக்கினத்திற்க்கு லக்கினாதிபதியும் இரண்டாவது வீட்டு அதிபதியும் சனிக்கிரகமே ஆவார். அவர் எட்டாவது வீடான சிம்மத்தில் அமர்ந்திருந்தார். 

ஒரு பையனின் ஜாதகம் இந்த பையனுக்கு பணமும் பிரச்சினை மற்றும் குடும்பஸ்தானம் அடிவாங்கியதால் திருமணவாழ்வும் பிரச்சினை. முப்பது வயது வரை திருமணம் நடைபெறவில்லை. வீட்டை விட்டு வெளியில் உள்ளார். பாருங்க இரண்டாவது வீட்டின் காரத்துவம் அதிகபட்சமாக அடிவாங்கிவிட்டது.

இவரின் பெற்றோர் பாவம் அல்லவா. நான் பொதுவாக பெற்றோர்களுக்காக தான் அதிகப்பட்சம் செய்வது உண்டு. அப்பொழுது ஜாதகத்தை பார்த்துவிட்டு இது மிகவும் சிக்கலான ஒரு அமைப்பு இதற்கு ஒரு வழி செய்யலாம் என்று சொல்லி உங்களின் நிலம் எங்கு உள்ளது என்று கேட்டேன். அதாவது எந்த இடத்தில் உள்ளது என்று கேட்டேன். பக்கத்தில் என்ன இருக்கின்றது என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் சுடுகாட்டிற்க்கு அருகில் இருக்கின்றது என்று சொன்னார்கள்.

இந்த பையன் ஊருக்கு வரும்பொழுது உங்களின் வயலுக்கு செல்வானா என்று கேட்டேன் இல்லை என்று சொன்னார்கள். அவன் வருவது மிகவும் கடினம் தான் என்றார்கள். பையனுக்கு அப்பொழுது தான் குரு தசா நடைபெற்றுக்கொண்டு இருந்தது. உடனே மகரராசியை வீடாக கொண்ட நபரின் லக்கினாதிபதி எட்டாவது வீட்டிற்க்கு சென்றுள்ளார். குடும்பஸ்தானஅதிபதியான சனியும் எட்டாவது வீடு சரி சுடுகாடு என்பது இவனுக்கு மிகவும் பரிச்சப்பட்ட ஒன்று என்று தெரிந்துக்கொண்டேன். 

அவன் வந்தவுடன் நேராக அவனின் வயலுக்கு அழைத்துக்கொண்டு செல்லுங்கள். வழியில் சுடுகாடு இருப்பதால் அந்த வழியில் அழைத்துச்செல்லுங்கள் என்றேன். இந்த பையன் ஊருக்கு வரும்பொழுது இவனை அழைத்துச்சென்றார்கள். உடனே எனக்கும் தகவல் சொன்னார்கள்.

நமது அம்மனை வைத்து அந்த நேரத்தில் ஒரு சின்ன வேலை செய்தேன். அதன் பிறகு பையனுக்கு குரு தசா நடப்பதால் அவனுக்கு கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் ஐயாவாடி பிரத்தியங்கார தேவியை வணங்க அனுப்பி வைத்தேன். அன்று இருந்து அவர் பிரத்தியங்கார தேவியின் உபசாகராக ஆகிவிட்டார். 

கையில் பணமும் வந்தது திருமணம் நடந்தது. ஐயாவாடி பிரத்தியங்கார தேவியை சுற்றி எட்டுதிசையிலும் சுடுகாடு இருக்கிறது. இவனுக்கு இங்கு தான் செய்யமுடியும் என்று என்மனம் கணக்கு போட்டது. லக்கினாதிபதி மற்றும் இரண்டாம் அதிபதி சுடுகாட்டை காட்டும் இடத்தில் இருக்கின்றார்கள் அல்லவா. சுடுகாட்டில் இருக்கும் தெய்வத்தை வைத்து தான் நிவர்த்தி செய்யமுடியும் என்று தோன்றியது. 

ஒவ்வொரு ஜாதகத்திலும்மிகப்பெரிய சூட்சமும் இருக்கிறது அதனை சரியாக கண்டுபிடித்து நாம் செய்தால் சரியான தீர்வு கிடைத்துவிடும். என்ன செலவு ஆகும் கொஞ்சம் பொறுமை வேண்டும்.அம்மன் இல்லை என்றால் வேலைக்கு ஆகாது.அம்மன் இருப்பதால் துணிந்து செய்கிறேன். இல்லை என்றால் சுடுகாட்டில் செய்வது எல்லாம் நம் உயிரை வாங்கும் செயலாக இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

வணக்கம், என் தங்கைக்கு நீங்கள் சொல்வதுபோல் மகரலக்னம்,சனி 8ல் ராகுவ்டன் ஆனால் 24 வயதிலேயே திருமணம்,25ல் குழந்தை,infosis-ல் வேலை,இதுவரை மிகவும் அழகாக குடும்பம் நடத்திக்கொண்டுள்ளார்,அவளின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்தில் உச்சம்,குரு 7ல் உச்சம்,உச்சம் பெற்ற கிரகங்கள் பரஸ்பரம் பார்க்கக் கூடாது என்கிறார்கள் இது திசா புத்திகளில் பாதிப்பை கொடுக்குமா? நன்றி

rajeshsubbu said...

வணக்கம் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு மாதிரியான பிரச்சினை வரும். ஒரு ஜாதகத்தில் ஏற்பட்டதால் அதேப்போல் அனைவருக்கும் ஏற்படும் என்று சொல்லுவது தவறு. உச்சம் பெற்ற கிரகங்களின் தசா புத்திகளில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. நன்றி