Followers

Tuesday, January 28, 2014

இனி தொடர்வோம்


வணக்கம் நண்பர்களே!
                    சில நாட்களாக பதிவு எழுதமுடியவில்லை வெளியூரில் சொந்த வேலைக்காக சென்று இருந்தேன். நான் வேலையாக இருக்கும்பொழுது பல நண்பரகள் போன் செய்தார் முடிந்தளவு அதனை தவிர்த்துவிட்டு வேலையில் இருந்தேன். அவர்களுக்கு எல்லாம் இன்று முதல் நான் தொடர்புக்கொண்டு பேசுகிறேன். வெளியூர் செல்லும்பொழுது அந்த ஊரில் இருந்த நமது ஜாதககதம்பத்தின் நண்பர்களை தொடர்புக்கொண்டு பேசினேன். நேரம் கிடைக்கும்பொழுத அவர்களின் வீடுகளுக்கு சென்று வந்தேன். 

இதில் என்ன என்றால் நமது நண்பர்கள் ஒவ்வொரு உணவு வேளைக்கும் அவர்களின் வீடுகளிலேயே உணவை தயார் செய்து என்னை கூபபிட்டது தான் மிகப்பெரிய விசயம். இவ்வளவு பாசத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கு எல்லாம் முடிந்தவரை ஆன்மீகம் மற்றும் சோதிடத்தை தரவேண்டும் என்று நினைக்கிறேன்.

பொதுவாக நான் அதிகமாக வெளியில் சாப்பிடுவது கிடையாது காரணம் குரு அதற்கு அனுமதி கொடுக்கமாட்டார். ஜாதக கதம்பம் வழியாக காயத்ரி மந்திரம் செய்பவர்களின் வீட்டில் சாப்பிடுவது உண்டு மற்றும் ஏழையாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களின் வீட்டில் சாப்பிடுவது உண்டு. கஷ்டப்படுகிறவர்கள் எதனை கொடுத்தாலும் வாங்கவேண்டும் என்பது விதி. அதன் வழியாக அவர்களின் தோஷம் நீங்கும். 

ஒரு சில நெருங்கிய நண்பர்களின் வீட்டில் சாப்பிடுவதும் உண்டு. என்னடா சாப்பாட்டை பற்றி சொல்லுகிறார் என்று நினைக்க தோன்றும். ஒரு ஆன்மீகவாதி உங்களின் வீட்டில் சாப்பிட்டார் என்றால் உங்களுக்கு வரும் எந்த ஒரு பிரச்சினையும் நீங்கும். உங்களின் ஊரில் உள்ள ஆன்மீகவாதியை ஒரு நாள் கூப்பிட்டு சாப்பாடு கொடுங்கள். விரைவில் பலனை நீங்கள் அனுபவிக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: