Followers

Friday, January 31, 2014

குரு தசா பலன்கள் பகுதி 83


வணக்கம் நண்பர்களே!
கேள்வி
Bălă Kumăressu ஐயா வணக்கம் .வியாழதிசை மற்றவர்களின் அன்பையும் ஆதரவையும் பொருளையும் எதிர்பார்க்கின்ற திசையாக இருக்கின்று அது ஏன்? உழைப்பிற்கு ஊக்கம் கொடுப்பதில்லை.
பதில்

அனைத்தும் உழைப்பு தான். எதனை வைத்து உழைக்கிறோம் என்பதில் தான் திறமை இருக்கிறது. ஒருவர் மூளையை வைத்து உழைத்தாலும் அது உழைப்பு தான். உடலை வைத்து உழைத்தாலும் அது உழைப்பு தான். ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரகத்தை கொண்டு உள்ளது. குரு கிரகம் உடலை உழைக்காமல் மூளை வைத்து உழைத்துக்கொள் என்று சொல்லுகிறது அதனால் மூளையை முதலீடாக வைத்து உழைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.

மற்றவர்களின் அன்பை எதிர்பார்க்காத ஆளை கிடையாது என்று தான் சொல்லவேண்டும் குரு தசா மட்டும இல்லை எல்லாம் தசாவிலும் அன்பை எதிர்பார்ப்பார்கள். மனிதனின் இயல்பு தான் அன்பை எதிர்பார்ப்பது.  அன்பை எதிர்பார்ப்பதை விட அன்பை நாம் செலுத்தமுடியுமா என்று யாரும் அவர்களை சுயபரிசோதனை செய்துக்கொள்வதில்லை.

என்னிடம் அன்பு இருந்தால் என்னை நாடி வருபவர்களும் அன்பை தருவார்கள். என்னிடம் கோபம் இருந்தால் என்னை நாடி வருபவர்களும் கோபமாக தான் இருப்பார்கள். இங்கே கொடுத்தால் தான் கிடைக்கும். கொடுக்கவில்லை என்றால் பிறரும் கொடுக்கமாட்டார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: