Followers

Thursday, January 2, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                    தொழில்களில் ஆன்மீகசேவையை ஆரம்பித்து பல நாட்கள் சென்றுவிட்டது. இன்று பல கம்பெனிகள் என்னை தொடர்புக்கொள்கிறது ஆனால் இதனை செய்வதற்க்கு பல விசயத்தில் யோசனை செய்து தான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

தொழில்துறையில் மிக உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு செல்லவேண்டும் என்று நினைத்து இருந்தது திருப்பூரில் இருநது ஒரு நண்பர் எனக்கு கிடைத்தார். யார் பெயரையும் வெளியிடவிரும்பவில்லை. இந்த நண்பருக்கு தான் அதிகமாக அம்மன் பயன்படுத்தப்படுகிறது. அடுத்ததாக வெள்ளக்கோவில் இருந்து ஒரு நண்பர் கிடைத்தார் அவருக்கும் அதேப்போல் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

திருப்பூரில் வந்த நண்பர் சிறந்த ஆன்மீகவாதி. அவர் என்னை புரிந்துக்கொண்டார் நானும் அவருக்கு செய்துக்கொடுத்து கொண்டிருக்கிறேன். இவர் கைகாட்டும் கம்பெனிகள் தான் அந்த பகுதியில் உயரும். இவர் வழியாக வரும்பொழுது எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக இருக்கிறது.

வெள்ளக்கோவில் நண்பர்க்கு அவரின் கம்பெனி மட்டும் இப்பொழுது செய்துக்கொண்டிருக்கிறேன். இந்த நண்பர் ஒரு கோவில் கட்டி இருக்கிறார். அவருக்கு அம்மன் உதவுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு நண்பர் இருக்கிறார் அவருக்கு இப்பொழுது தான் ஆரம்பித்து இருக்கிறேன். இவரும் நல்ல ஆன்மீகவாதி.

இவர்கள் அனைவரும் ஆன்மீகவாதியாக தான் இருக்கின்றனர். நான் செய்யும் வேலைகள் சரியான நபருக்கு தான் போய் கிடைக்கும். அதே நேரத்தில் மிக கவனமாக இவர்களுக்கு செய்கிறேன் அப்படி என்ன என்றால் தொழிலுக்கு உதவி செய்வது என்றால் படிப்படியாக ஒரு தொழில் மேல்நோக்கி செல்வது தான் உண்மையான வளர்ச்சி.

ஒரேடியாக நான் வளர்ச்சியை கொடுக்கமுடியும் அப்படி கொடுத்தால் அது கர்மம். கர்மத்தை எடுத்து வளர்ச்சியை கொடுப்பது மிகவும் கெடுதலான ஒன்று. அப்பொழுது திடீர் வளர்ச்சியாக இருக்கும் பின்பு பார்த்தால் அவர்களுக்கு தீர்க்கமுடியாத கர்மம் வந்துவிடும். அனைவரும் இளைஞர்கள் அவர்களுக்கு கெடுதலை செய்துவிடகூடாது. இதனை நான் அவர்களிடம் சொல்லி விட்டேன் அவர்களும் ஏற்றுக்கொண்டதால் மட்டுமே இதனை செய்கிறேன்.

எந்த ஒரு காலத்திலும் இவர்கள் தொழில் தோல்வி என்பது அடையவே அடையாது. மிகப்பெரிய தெய்வசக்தி உதவிசெய்கிறது.தொழில் செய்பவர்கள் பல பேர்கள் என்னை சரியாக பயன்படுத்த தெரியவில்லை என்பதே உண்மையான ஒரு செய்தி வந்த பாதிப்பேர்கள் நிற்கவில்லை அதற்கு காரணம் ஒரே மாதத்தில் கோட்டையை பிடிக்கலாம் என்ற கனவு. பெருமையாகவே சொல்லிக்கொள்வது என்ன என்றால் என்னைப்போல் ஒருவனை ஒருத்தன் தவறவிடுவதே மிகப்பெரிய தோல்வி.

பல பேர் இருக்கின்றனர் அவர்களுக்கு குறைவாக தான் செய்து இருக்கிறேன். பார்க்கலாம். இனி வரும் நபர்களையும் மிகவும் பார்த்து தான் தேர்வு செய்வேன். யாருக்கு கிடைக்கவேண்டும் என்று இருக்கிறதோ அவர்களுக்கு இது கண்டிப்பாக கிடைக்கும். ஒரு சில பேர்கள் அப்படியே தேர்வுநிலையிலேயே இருக்கின்றது.

தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய உதவி என்ன என்றால் அவர்களுக்கு சோதிடம் மற்றும் ஆன்மீக வழியில் மிகப்பெரிய தகவல் அவ்வப்பொழுது தந்துக்கொண்டே இருக்கின்றேன். அதனை அவர்கள் சரியாக பயன்படுத்துகிறார்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: