Followers

Tuesday, January 28, 2014

ஆன்மீக அனுபவங்கள் 150


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் பேசும்பொழுது கேட்டார் இவ்வளவு செய்கிறீர்களே அது எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்று கேட்டார். அவருக்கு நான் சொன்னது.

                   ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

சுவாமி விவேகானந்தர்.

இந்த வாக்கியத்தை தான் மேற்கோள் காட்டி சொன்னேன். நமது ஆத்மாவை பற்றி தெரியாதை வரை நமக்குள்ளே எதுவும் நடைபெறாது.பொதுவாக தன்னை உணரவேண்டும் அப்பொழுது தான் தெய்வீகம் என்றால் என்ன என்று தெரியவரும்.

ஆத்மாவின் பலம் தான் அனைத்தும் நடைபெறும் அந்த ஆத்மாவை பலப்படுத்தினால் உங்களுக்கு அனைத்தும் கிடைத்துவிடும்.ஆத்மாவை பலப்படுத்துவது எப்படி என்று கேட்கிறீர்களாக விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்திருக்கவேண்டும்.

பல பேர் சொல்லுவது தெரிகிறது. அப்ப நாம் பலப்படுத்தமுடியாது என்று தெரிகிறது.என்று சொல்லுவது புரிகிறது. முதல் தகுதியே நீங்கள் விடியற்காலை நான்கு மணிக்கு எழுவது மட்டுமே. அப்படி எழுந்துவிட்டீர்கள் என்றால் ஆத்மா அதுவாகவே பலப்படுத்திக்கொள்ளும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: