Followers

Monday, January 13, 2014

விழிப்பவர் பிழைக்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சோதிடர் என்ன தான் சொன்னாலும் பரிகாரம் செய்வது என்பது அவர் அவர்களின் கையில் தான் இருக்கின்றது. பூர்வபுண்ணியம் நன்றாக இருந்து குலதெய்வம் அருளும் கிடைத்தால் அவர்களை தூண்டிவிட்டு பரிகாரத்தை செய்ய வைக்கும். இது இரண்டும் கெட்டால் அவர்கள் எதுவும் செய்யமுடியாது.

பொதுவாக நான் சொல்லும் பரிகாரம் எல்லாம் மிக குறைந்த விலையில் செய்யக்கூடிய அவர் அவர்களே செய்யக்கூடிய பரிகாரமாக இருக்கும் ஆனால் என்னிடம் பரிகாரத்தை எல்லாம் கேட்பார்கள் அப்படியே வீட்டில் போய் உட்கார்ந்துக்கொண்டுவிட்டு பிரச்சினை போகவில்லை என்று தன்னை நொந்துக்கொள்வார்கள்.

ஒரு சிலர் பல சோதிடர்களிடம் சென்று அனைத்தையும் கேட்டுக்கொண்டு அனைத்தையும் செய்துக்கொண்டிருப்பதும் பயனளிக்காது.ஒரு சோதிடரை பார்த்துவிட்டு பலனை கேட்டுவிட்டு பரிகாரத்தை செய்துவிடவேண்டும். அதனை விட்டுவிட்டு ஒவ்வொருவரிடமும் சென்று கேட்டால் பிரச்சினை மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடும்.

நிறைய பிரச்சினை வருகிறது என்று நினைப்பவர்கள் ஜாதகத்தை பார்த்து தெரிந்துக்கொள்பவர்கள் உடனடியாக ஆன்மீகத்தில் என்ன வழி உள்ளது என்று பார்த்து அதில் இறங்கி தன்னை தயார்படுத்திக்கொள்ளவில்லை என்றால் மாட்டிக்கொள்வீர்கள்.

என்னிடம் சோதிடம் பார்த்தவர்கள் ஐந்து சதவீதம் பேர் பரிகாரத்தை செய்தாலே மிகப்பெரிய செயலாக தான் இருக்கும். யாரும் செய்வது கிடையாது. நான் சொல்லுவது மொத்த செலவு நூறு ரூபாய் கூட வராது ஆனால் செய்வது கிடையாது. ஒவ்வொரு கிரகத்திற்க்கும் நான் சொல்லுவது போல் பரிகாரம் செய்தால் மட்டுமே உங்களுக்கு அம்மனை வைத்து உதவி செய்யமுடியும்.இல்லை என்றால் ஒன்றும் நடைபெறாது விழித்துக்கொள்பவர் பிழைத்துக்கொள்ளலாம்..

இதனைப்பற்றி தொடர்ந்து பார்க்கலாம்

அம்மனின் பூஜை இன்று அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க அம்மனாவது உதவும் என்று நம்புங்கள்.கண்டிப்பாக ஏதாவது ஒரு உருவில் உங்களை காப்பாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
பூர்வ புண்ணியம் கெட்டு இருப்பவர்கள் எந்த எந்த வழிகளில்
எல்லாம் அவற்றைப் பெருக்கிக் கொள்ளலாம் ?
அது சாத்தியமா ?