Followers

Friday, January 10, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 11


வணக்கம் நண்பர்களே!
                    பிரச்சினையும தீர்வும் பகுதியில் நண்பர்கள் இப்படிப்பட்ட ஜாதகம் எனது உறவினர்களுக்கு இருந்தது அப்படி நடைபெறவில்லையே என்று கேட்கிறார்கள். ஒருவருக்கு நடந்தது போல் அடுத்தவர்களுக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறு தான். ஒவ்வொருவருக்கும் ஜாதகம் வித்தியாசப்படும். 

நான் சொல்லுகின்ற விசயங்கள் அனைத்தும் பாதிக்கு மேல் மறைத்து எழுதுகிறேன் அதற்கு காரணம் நான் சொல்லும் கிரகநிலைகளில் இருப்பவர்கள் தன்னுடைய ஜாதகத்தை பார்த்துவிட்டு மிகவும் கஷ்டப்படலாம் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அதனை பார்த்துவிட்டு வருத்தப்பட நேரிடும் என்பதால் மறைப்பது உண்டு.

இரண்டாவது வீடு கெட்டுவிட்டால் என்ன நடக்கும் என்று ஒரு கருத்தை மட்டும் சொல்லுகிறேன். பதிவில் சொன்ன ஜாதகத்தையை உதாரணமாக காட்டுகிறேன். இரண்டாவது வீட்டு சனி எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது சுடுகாட்டில் வேலை செய்பவரின் பெண்ணோடு சம்பந்தப்பட்ட பையனுக்கு தொடர்பு இருந்தது. 

நான் அந்த பையனிடம் விளக்கி சொன்னேன். இப்படிப்பட்ட கிரகநிலைகள் இருந்தால் இப்படி தான் நடைபெறும். நீ கிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்லாதே. அதனை தவிர்த்துவிட்டு நான் சொல்லுவது போல் செய் என்றேன். இதனை அந்த பெற்றோரிடம் சொன்னால் சண்டை பெரிய அளவில் உருவாகி அந்த பையனை உண்டு இல்லை என்று செய்வார்கள். 

பையனிடம் தனியாக விளக்கி இப்படி எல்லாம் நீ இருக்ககூடாது உன் குடும்பத்தின் நிலையை சற்று கவனித்து பார் என்றேன். அவனும் புரிந்துக்கொண்டான்.

பெற்றோர்களின் கவனத்திற்க்கு உங்களின் பையன் அல்லது பெண் வெளியில் உங்களோடு சிரித்து பழகுகிறார்கள் அவர்களுக்கு பிரச்சினை இல்லை என்று மட்டும் நினைக்காதீர்கள்.இப்படிப்பட்ட கிரகநிலைகள் உள்ளவர்கள் மறுபக்கம் மிகவும் மோசமானது. அப்படி ஒரு பாதிப்பை பெற்று இருப்பார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தன் மனதோடு போராட்டம் நடத்திக்கொண்டு இருப்பார்கள். வெளியில் காட்டமாட்டார்கள்.

ஒரு மனிதன் தவறு செய்தால் நீங்களாக இருக்கும்பொழுது அது தவறு என்று சொல்லுவீர்கள் நானாக இருந்தால் அது தவறு இல்லை உன் கிரகங்களின் தாக்குதலால் இது நடந்துள்ளது. இதனை தாண்டி நீ வா என்று சொல்லுவேன்.

ஒவ்வொரு சோதிடர்களும் இப்படி தான் நினைப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் தெரியும் ஆனால் காட்டிக்கொள்ளமாட்டார்கள்.சபை நாகரீகம் கருதி காட்டிக்கொள்ளமாட்டார்கள். இவன் கிரகத்தின் பிடியில் இருக்கிறான். இவன் என்ன செய்வான். அவனை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது வேலை.

கிரகங்களின் பாதிப்பு நடக்கதான் செய்யும் ஒரு சில விசயங்கள் நடப்பது வெளி உலகத்திற்க்கு தெரியாது. ஒரு சில தெரியவரும் அவர் அவர்களின் மனசாட்சிக்கு கண்டிப்பாக தெரியும்..கிரகங்களின் பாதிப்பில் இருந்து மீட்க தான் சோதிடர்களை  மற்றும் ஆன்மீகவாதிகளை படைத்திருக்கிறான். நான் எழுதும் அனுபவங்கள் முக்கால்வாசி மறைக்கிறேன் என்பதை ஒற்றுக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: