Followers

Thursday, January 9, 2014

எப்படி நடைபெறுகிறது?


வணக்கம் நண்பர்களே !
                    பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு எழுதுவதை படித்துவிட்டு எப்படி இதனை எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இதற்க்கான பதில் உழைப்பு மட்டுமே. ஒரு தேர்வு எழுதுவதாக இருந்தால் நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கின்றீர்கள் அது போல் தான் இதுவும். 

ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பல வேலைகளை உள்ளுக்குள் செய்கிறேன். அப்படி ஒவ்வொன்றும் செய்யும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றத்தை தருகிறேன். பொதுவாக என்னை நாடி வரும் நண்பர்கள் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக மட்டும் வருவார்கள். அப்படி வரும்பொழுது பிரச்சினை கொடுக்கும் கிரகத்திற்க்கு மட்டும் பரிகாரம் செய்ய சொல்லிவிட்டு அம்மனை வைத்து அந்த காரியத்தை நடத்திவிடுவேன். அதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும்.

என்னோடு ஒரு நபர் ஏதோ ஒரு தொழிலுக்கு என்று இணையும்பொழுது அவர்களுக்கு செய்யும் வேலை என்பது மிகப்பெரியதாக இருக்கும். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நான் செய்ய வேண்டும்.  செயல் என்பது நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு வேலையாக இருக்கின்றது.

ஜாதகத்தை அலசி அந்த கிரகங்களின் செயலை என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து செய்கிறேன். அப்படி செய்யும்பொழுது அவர்களுக்கு வளர்ச்சி என்பது வரும்.அவர்களின் குடும்பங்கள் ஒரு பாதுகாப்பான வளையத்திற்க்குள் கொண்டு வருகிறேன்.

வாழ்க்கையில் பாதிநாள்கள் இதற்க்காக கஷ்டப்பட்டு கற்று இருக்கிறேன். வெறும் சோதிடத்தை மட்டும் நாம் நம்பி உட்கார்ந்து இருந்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. நீங்களும் நல்ல மூளையை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக அனைத்திற்க்கும் வழி இருக்கிறது.

பல பேருக்கு பிரச்சினை என்று வரும்பொழுது அவர்களின் பிரச்சினைக்காக ஒரு சில கோவிலுக்கு செல்லுகிறேன். அந்த கோவில்கள் கண்டிப்பாக கூட்டம் என்பது இருக்காது. அப்படிப்பட்ட கோவில்களை தேடி சென்று அவர்களுக்காக நான் பூஜை செய்வது உண்டு. 

அப்படிபட்ட கோவில்களைப்பற்றி வெளியில் சொல்லுவதும் கிடையாது. பதிவிலும் சொல்லுவது கிடையாது. ஒரு சில காலகட்டங்களுக்கு பிறகு நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஒரு சிலருக்கு இந்தந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று சொல்லுவது உண்டு.

நண்பர்களே நாளை நடைபெற இருந்த அம்மனின் பூஜை 13 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

CHITRA said...

How can i send the money for the pooja on 13th ? cHITRA kRISHNAN

CHITRA said...

Sir,
Hoe can i send the money for pooja on 13th. our kula thaivam is also angalaparameswari, located in kumbakonam, in tanjore road, it ias also small temple . Chitra Krishnan

rajeshsubbu said...

வணக்கம் என்னுடைய வங்கி கணக்கில் சேர்த்துவிடுங்கள். கட்டண சோதிடத்தில் எனது வங்கி கணக்கு விபரம் இருக்கின்றது