Followers

Saturday, January 11, 2014

நம்பினால் நம்புங்கள்



வணக்கம் நண்பர்களே !
                    நமது நண்பர்களுக்கு ஒரு சிலர் குழந்தை இல்லை என்று ஜாதகத்தில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்க என்னை தொடர்புக்கொள்வார்கள். அப்படி தொடர்புக்கொள்ளும்பொழுது அவர்களின் ஜாதகத்தை பார்த்து அதற்கு பரிகாரத்தை பரிந்துரைப்பது வழக்கம்.

அவர்கள் செய்யும் பரிகாரத்தை செய்து அவர்களுக்கு குழந்தை இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அப்படி அவர்கள் பரிகாரம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அம்மனை வைத்து குழந்தை பாக்கியத்திற்க்கு வழி செய்வது உண்டு. 

அம்மனை வைத்து செய்யும்பொழுது ஒருவருக்கு குழந்தை உருவாக்க நினைத்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு குழந்தைபாக்கியம் உருவாகும். அவர்கள் குழந்தையை சுமக்கும் பத்து மாதமும் நான் சுமப்பது போலவே எனக்கு தோன்றும்.

அந்த பெண் என்ன வலியை பெறுகிறாளோ அதனை நான் பெறவேண்டும். உண்மையில் பெண்கள் என்பவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பது இதனை செய்யும்பொழுது தான் எனக்கு தெரிந்தது. இதற்கு பயந்தே நான் யாருக்கும் இந்த விசயத்திற்க்கு மட்டும் ஒற்றுக்கொள்வதில்லை. குரு யார் குழந்தை வேண்டும் என்று வருகிறார்களோ அவர்களுக்கு அம்மனை வைத்து கொடுத்துவிடு என்பார் ஆனால் வலியை நினைத்தே அதற்கு மட்டும் ஒற்றுக்கொள்வதில்லை.

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: