Followers

Monday, January 20, 2014

சோதனை மேல் சோதனை


ணக்கம் ண்பர்களே!
                    சோதனை மேல் சோதனை வைத்து தான் ஒருத்தரை உயர்த்துகிறோம். என்னிடம் ஒரு பையன் போனில் நலம் விசாரித்துக்கொண்டு இருப்பார் குறைந்தது மாதத்திற்க்கு ஒரு முறை போனில் பேசிக்கொண்டிருப்பார். அவர் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறவர். ஒரு நாள் நேரில் என்னிடம் வந்து எனது வீட்டில் ஒரு நாள் அம்மன் ஹோமம் நடத்திக்கொடுங்கள் என்று கேட்டார். சரி இவனிடம் பணம் வாங்ககூடாது என்று எண்ணிக்கொண்டு இவனுக்கு ஒரு சோதனை வைக்கலாம் என்று எண்ணி எனக்கு வேலை அதிகமாக இருக்கின்றது பிறகு பார்க்கலாம் என்றேன்.

அந்த பையன் போய்விட்டான். பிறகு என்னை தொடர்புக்கொள்ளவில்லை ஒரு நாள் அவனை தொடர்புக்கொண்டு எனக்கு ஒரு வேலை செய்யவேண்டும் நீ வந்து செய்து குடு என்று கேட்டேன். நான் அங்கு இருக்கிறேன் என்னால் வரமுடியாது என்பான். அடுத்த நாள் போன் செய்தால் ஏதாவது ஒரு காரணம் சொல்லுவான்.கடைசி வரை வரவேயில்லை.

சரி விட்டுவிடலாம் என்று இருந்துவிட்டேன். அவனின் நினைப்பு என்னை பலி வாங்கிறேன் என்ற ஒரு நினைப்பு. அவன் கூப்பிட்டு நான் போகவில்லை அதனால் நான் கூப்பிட்டு அவன் வரகூடாது என்று எண்ணி இருக்கிறான். ஒரு சின்ன சோதனை அதனை அவனால் வெல்லமுடியவில்லை.

நீங்கள் நினைக்கலாம் ரொம்ப திமிராக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று தோன்றும் அப்படி கிடையாது ஒரு மனிதனை சோதனை செய்யாமல் செய்யகூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்ட விதி.

நான் பரவாயில்லை என்னை போல் ஒருவர் இருக்கிறார் அவரை சந்திக்க ஒரு நபர் வந்திருந்தார் வந்தவர் அவரிடம் சாய்பாபா அதனை செய்தார் இதனை செய்தார் வேண்டியது எல்லாம் கொடுப்பார் என்று சொன்னார். அந்த நண்பரிடம் ஏதோ பிரச்சினைக்கு என்று வந்தவர் தேவையில்லாமல் இதனை சொல்லிக்கொண்டுருந்தார். நீ போய் சாய்பாபாவிடம் கேட்டு வாங்கிக்கொள் இங்கு வராதே என்று அனுப்பிவிட்டார்.

என்னிடம் வரும் ஏழை மக்களுக்கு எந்த வித சோதனையும் செய்யாமல் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன். பல பேர் பயனாளிகளாக இருக்கின்றனர். ஒரு சிலருக்கு நானே வலியபோய் பரிகாரம் செய்யுங்கள் நான் உங்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிருக்கிறேன்.

ஒரு சிலருக்கு நல்லது நடந்ததை அவர்களே கெடுத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்கள் ஒரு லட்சம் லாபம் பார்த்திருப்பார்கள் எனக்கு அனுப்புவது நூறு ரூபாயாக இருக்கும். அதன் பிறகு அவர்கள் அம்மனிடம் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் பக்கம் செல்லவே செல்லாது.அதே நேரத்தில் பத்தாயிரம் சம்பாதிப்பவர்கள் ஆயிரம் ரூபாய் எனக்கு அனுப்பியும் உள்ளார்கள். 

கலியுகத்தில் இது எல்லாம் நடைபெறவைக்கமுடியுமா என்று கேட்கும் விசயம் எல்லாம் ஜாதககதம்பம் வழியாக நடைபெறும் ஆனால் அதற்கு நீங்கள் சரியாக இருக்கவேண்டும்.

நான் கற்ற அனைத்தும் ஜாதககதம்பத்தில் உள்ளவர்களுக்கு தான் செய்யபோகிறேன் செய்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சரியான முறையில் இருக்கவேண்டும். கள்ளம் கபடம் இல்லாமல் அம்மனை அணுகும்பொழுது உங்களுக்கு அனைத்தையும் தரும். வருகிறது வரட்டும் வந்தபிறகு நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கலாம் என்று நினைப்பவர்கள் வராதீர்கள்.

நிறைய நண்பர்கள் கிரங்களை மாற்றி நல்லது செய்துக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள். செய்யாமல் இல்லை ஒவ்வொரு காலகட்டத்திலும் இதனை இதனை செய்யவேண்டும் என்பது எங்களுக்கு விதி உள்ளது அந்த விதியை மீறி நாங்கள் எதுவும் செய்யமுடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக முடியும் அதனை செய்ய உங்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கின்றது என்பதை பொருத்து அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: