Followers

Monday, January 6, 2014

ஒரு நிமிடம்


வணக்கம் நண்பர்களே!
                    பிரச்சினையும் தீர்வும் படித்து இருப்பீர்கள். அதனைப்படித்துவிடடு நீங்கள் செயல்பட ஆரம்பிக்கவேண்டும். நமக்கு கடவுள் இப்படி எழுதிவிட்டார் என்று பார்த்து பயந்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடகூடாது என்பதால் மட்டுமே இந்த தொடரை எழுத ஆரம்பித்தேன். எனக்கு பிரச்சினை ஏற்பட்டபொழுது எப்படி தேடினேன் என்பதை சொல்லி உங்களையும் அப்படி தேடுங்கள் என்று சொல்லுகிறேன்.

நான் சொல்லும் விசயங்களை படித்துவிட்டு நீங்கள் என்னிடம் மட்டும் வரவேண்டும் என்பதில்லை உங்களுக்கு பிடித்தமானர்களிடம் சென்று இப்படி செய்யுங்கள் என்று சொல்லி செய்துக்கொள்ளுங்கள். ஒரு சில தசா பதினெட்டு வருடங்கள் உங்களை போட்டு வாட்டி எடுத்துக்கொண்டு இருக்கும் அப்பொழுது விதி என்று உட்கார்ந்தால் உங்களின் பாதி வாழ்க்கை முடிந்துவிடும் என்பதால் உடனே செயல்படுங்கள் என்று சொல்லுகிறேன்.

ஜாதகத்தில் பிரச்சினை என்றால் உடனே அடித்துபிடித்துக்கொண்டு எங்கு சென்றால் நாம் தப்பிக்கலாம் என்பது மட்டுமே உங்களின் செயலாக இருக்கவேண்டும்.நான் தேடிய காலத்தில் எல்லாம் கையில் பணம் இல்லாமல் கடன்வாங்கிக்கொண்டு தேடிய காலங்கள் உண்டு. ஏன் என்றால் எப்படியும் ஒரு விடிவை வைத்திருப்பான் இறைவன் அது எங்கு இருக்கிறது என்பதை தேடித்தான் அத்தனை ஒட்டங்களும் இருந்தன.

உங்களின் ஜாதகத்திலும் பிரச்சினை என்றால் நீங்களும் கண்டிப்பாக இப்படி தேடி அதற்கு ஒரு விடிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எனது ஆசை அதனை நீங்கள் தேடி அடையுங்கள். அனைவருக்கும் ஒரு வழி என்பது இருக்கிறது. அது எங்கு நமக்கு இருக்கின்றது என்பது தான் பிரச்சினை. காலத்தை வீணடிக்காமல் உங்களை சரிசெய்துக்கொள்ளுங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: