Followers

Tuesday, January 28, 2014

சில தகவல்கள்


வணக்கம் நண்பர்களே!
                    சோதிட அனுபவத்தில் வெளிவரும் செய்திகளை படித்துவிட்டு ஒரு நண்பர்களின் ஜாதகத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுருந்தார்.

நம்மிடம் சோதிடம் பார்ப்பவர்களின் ஜாதகத்தை வெளியில் தருவது கிடையாது. ஒருவரின் ஜாதகம் மட்டும் கிடைத்தால் அந்த ஜாதகத்தை வைத்து எது வேண்டுமானாலும் செய்யலாம். அடுத்ததாக சம்பந்தப்பட்ட நபர் கொஞ்சம் சங்கடப்பட நேரிடும் என்பதால் தவிர்ப்பது உண்டு. 

உங்களுக்கு தேவையான கருத்தை மட்டும் தந்துவிடுகிறேன் அதனை வைத்து வேறு ஜாதகம் வரும்பொழுது பார்த்துக்கொள்வது நல்லது. ஒரு நண்பர் ஒரு கோவிலைப்பற்றி சொல்லிருந்தார். எந்த ஒரு பரிகாரத்திற்க்கும் நான் அதிகமாக கோவிலைப்பற்றி சொல்லுவது கிடையாது. ஏன் என்றால் நான் அந்த கோவிலுக்கு எல்லாம் சென்றது கிடையாது. நான் சொல்லும் பரிகாரங்கள் மிகவும் எளிமையாக அந்தந்த ஊரிலேயே அதாவது நீங்கள் இருக்கும் ஊரிலேயே செய்துக்கொள்வது போல் தான் இருக்கும்.

நிறைய பிரச்சினையை வைத்துக்கொண்டு இலவசசோதிடம் வழியாக யாரும் அணுகவேண்டாம்.ஏழை மக்களுக்காக அந்த சேவை செய்யப்படுகிறது. அதனை தவறாக பணம் வைத்திருப்பவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.உண்மையில் என்னிடம் எதுவும் இல்லை என்னை காப்பாற்றுங்கள் என்று சொல்லுபவர்களுக்கு கண்டிப்பாக செய்துதருகிறேன். பணம் வைத்துக்கொண்டு ஏமாற்றலாம் என்று வருபவர்கள் தயது செய்து வராதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: