Followers

Tuesday, January 21, 2014

சில கருத்துக்கள்


ணக்கம் ண்பர்களே!
                    ஜாதககதம்பத்தில் எழுதும் பதிவுகள் எல்லாம் என்னுடைய அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதப்படுகிறது. என்னிடம் சோதிடம் பார்ப்பவர்கள் அவர்களின் வாழ்வில் நடந்த விசயத்தை வைத்து எழுதுகிறேன். இதில் யாரையும் பேரை குறிப்பிட்டு எழுதுவதில்லை. ஒரு பிரச்சினை போல் பல பேர்க்கும் அதே பிரச்சினை இருக்கும். அதனை எழுதுவதால் எங்களை தான் இவர் எழுதுகிறார் என்று நினைக்கவேண்டாம்.

என்னிடம் சோதிடபார்த்தவர்களுக்கு நான் ஒரு சில நேரங்களில் நேரிடையாக எதுவும் சொல்லமுடியாது அவர்களுக்கு பதிவு வழியாக ஒரு சில விசயங்களை உணர்த்தவும் பதிவில் எழுதுகிறேன் அதனை நீங்கள் தவறாக நினைக்கவேண்டாம்.

என்னை கூட நான் வெளியில் காட்டிக்கொள்வது கிடையாது அப்படி இருக்கும்பொழுது உங்களை எப்படி காட்டிக்கொள்வேன் அதனால் பயம்க்கொள்ள தேவையில்லை.

நமது ஜாதககதம்பத்திற்க்கு ஐநூறு பேர் வந்தால் அத்தனை பேரும் ஏதோ ஒரு விசயத்தில் முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருப்பீர்கள் என்று தான் அர்த்தம் இணையத்தில் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்பொழுது இதனை தேடி வந்து படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா அதனால் சொன்னேன்.

ஜாதககதம்பத்தில் பாதிக்கு மேல் அமானுஷ்ய விசயங்களை எழுதுகிறேன் .நூறு சதவீதம் அது எனக்கு பிராடிக்கல் அறிவு உங்களுக்கு புரியாது தான் .இது நான் கற்ற விசயத்தில் ஐந்து சதவீதம் மட்டுமே சொல்லுகிறேன். அனைத்தையும் சொன்னால் நீங்களே பயம்கொள்வீர்கள். நான் தேடியபொழுது இப்படிபட்ட விசயங்கள் எல்லாம் எனக்கு கிடைத்தது. இதனை படிப்பவர்களும் தேடிச்செல்லும்பொழுது அவர்களுக்கு இது கிடைக்கும் என்பதால் எழுதுகிறேன். முழுவதும் எழுதுவதற்க்கு குரு நாதர் தடை செய்து இருக்கிறார் அவரை மீறி எழுதமுடியாது. 

எங்களிடம் உள்ள சக்தியின் சக்தி ஒரு சதவீதம் உங்களுக்கு கிடைக்கிறது அதற்கு மேல் கிடைக்காது. உங்களை வைத்து நான் செய்முறை எல்லாம் செய்வதில்லை. ஒரு சிலருக்கு விதி என்னை தான் பிடிக்கவேண்டும் என்று இருக்கும் அவர்கள் மட்டும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பார்கள் அப்பொழுது அவர்களுக்கு அம்மன் தானாகவே செய்துவிடும். 

நீங்கள் என்னை தேடி வந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை. நான் சொல்லவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன். உங்களின் கர்மா அதனை தீர்மானிக்கும். கர்மாவை மீறி என்னை சந்திப்பவர்கள் இத்தனை வருடங்களில் ஒரு ஐந்து பேர் இருந்தாலே மிகப்பெரிய எண்ணிக்கை தான்.

பரிகாரம் செய்யும்பொழுது கிரகங்களுக்காக மட்டுமே ஏதாவது செய்ய சொல்லுவது உண்டு. அந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் கூட நடத்திக்கொடுப்பது எல்லாம் அம்மன் தான்.  அம்மனை கெட்டியாக பிடித்துக்கொள்வது உங்களின் பொறுப்பு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: