Followers

Tuesday, January 28, 2014

திருவாதிரை மற்றும் சதயம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை வந்து சந்தித்து பேசினார். அவர் பேசும்பொழுது பல விசயங்களில் அவர் நல்ல அறிவை பெற்று இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. பெரும்பாலும் அவர் நுழையாத ஒரு துறையே இல்லை என்ற அளவுக்கு பேசினார். 

மனநலத்தைப்பற்றி எல்லாம் பேசினார். அவர் சந்திக்காத ஆட்களை கிடையாது என்று நினைக்கிறேன் அந்தளவு அவரின் பேச்சு இருந்தது. கடைசியில் அவரிடம் நான் சார் உங்களின் நட்சத்திரம் என்ன என்று கேட்டேன். அவர் சதயம் நட்சத்திரம் என்று சொன்னார்.

அவரிடம் உங்களுக்கு தெரிய ஒரு விசயமும் கிடையாது அதே நேரத்தில் உங்களுக்கு இரவில் நீங்கள் தூங்கவே முடியாதே என்று சொன்னேன். அவர் எப்படி சார் கண்டுபிடித்தீர்கள் என்று சொன்னார்.

நான் சொல்ல ஆரம்பித்தேன். திருவாதிரை மற்றும் சதயம் நட்சத்திரத்தை உடையவர்கள் கண்டிப்பாக இரவு நேரங்களில் அவர்கள் தூங்குவது என்பது மிகவும் ஒரு கடினம். அவர்களுக்கு அனைத்து திறமையும் கொடுத்த ஆண்டவன் இப்படி ஒரு குறையை வைத்திருப்பது பொதுவாக யாருக்கும் தெரியாது.

என்னிடம் நிறைய நண்பர்கள் இப்படி வந்திருக்கின்றனர். அவர்கள் என்னிடம் சார் மண்டைக்குள் ஏதோ ஒன்று ஒடுவது போல் தெரிகிறது என்று சொல்லுவார்கள். நான் அவர்களிடம் ஏன் தேவையற்ற கற்பனைகளை செய்துக்கொள்கிறீர்கள் என்று கேட்பது உண்டு. இதில் இன்னும் ஒரு படி மேலே போய் வீட்டை விட்டு ஒடுவார்கள். அதுவும் பெளர்ணமி மற்றும் அமாவாசையின் இரவில் இவர்களின் மனம் படும்பாடு மிகவும் கொடுமையாக இருக்கும்.இந்த ஒரு காரணத்தால் இவர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்படைய செய்யும்.

இவர் என்னிடம் வந்ததின் நோக்கம் தொழிலை வளர்ச்சி அடைய உதவுங்கள் என்று கேட்டு வந்தார் அவருக்கு அவரைப்பற்றி சொன்னவுடன் அவர் முதலில் இதனை எனக்கு சரிசெய்துக்கொடுங்கள் என்று கேட்டார். இந்த இரண்டு நட்சத்திரத்தைப்பற்றி பல காலங்களுக்கு முன்பே நான் தீவிர சிந்தனை செய்து இவர்களுக்கு உதவவேண்டும் என்று எண்ணி பல விசயங்களை செய்து பார்த்தது உண்டு.

பொதுவாக மனநல நிபுணர்களிடம் சென்று இவர்களை காட்டினால் இவர்களைப்பற்றி கண்டுபிடிக்கமுடியாது. இவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று கூட தெரியாது ஆனால் இவர்களுக்கு நோய் இருக்கும். நான் பல பேர்களிடம் சவால் செய்தது உண்டு. மருத்துவதுறையில் இவர்களை கண்டுபிடித்து விட்டால் நான் இந்த தொழிலையே விட்டுவிட்டு சென்றுவிடுகிறேன் என்று எல்லாம் சொல்லுவது உண்டு.

இந்த இரண்டு நட்சத்திரத்தை பற்றி பழைய பதிவில் எழுதி உள்ளேன். நேற்று ஒருவரை சந்தித்ததால் எழுதுகிறேன். பொதுவாக இது ஆன்மீகத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சரி செய்ய வேணடிய ஒன்று. மருத்துவத்தால் இதனை சரிசெய்யமுடியாது. ஏன் என்றால் மருத்துவதால் கண்டுபிடிக்கமுடியாத ஒரு வியாதி இது அப்புறம் எப்படி சரி செய்யமுடியும். ஆன்மீகத்தால் மட்டுமே சரிசெய்யகூடிய ஒரு செயல் இது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Unknown said...

sir iam also thiruvathirai,same problems for me pls helpme

Anonymous said...

இரவு உணவிற்குப் பின் பால் மற்றும் குறிப்பாக வாழைப்பழம்
சாப்பிடுவதும் , முத்திரை யோகாவில் ஞான முத்திரை , அபான முத்திரை மற்றும்
பிராண முத்திரை செய்வதும் நல்ல பலன் அளிக்கும்.