Followers

Thursday, January 23, 2014

குரு தசா பலன்கள் பகுதி 79


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் குரு தசா செவ்வாய் புத்தியை பற்றி பார்க்கலாம்.

செவ்வாய் புத்தியின் காலம் அளவு 11 மாதம் 6 நாட்கள் ஆகும். குறைந்த கால அளவு இருந்தாலும் நிறைந்த பலனை தரும். செவ்வாய் பூமிக்காரன் என்பதால் நிலபுலங்களில் அதிகம் கவனம் செலுத்தும்பொழுது இந்த புத்தியை நீங்கள் நன்றாக பயன்படுத்தமுடியும். 

நீங்கள் கேட்கலாம் ஏன் அதுவாகவே நமக்கு பலனை தராது என்று கேட்கதோன்றும் நமது கர்மா நம்மை தாக்கும்பொழுது நாம் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டால் நமக்கு கிடைக்கும் பலனை அதிகப்படுத்தலாம் அல்லவா அதனால் சொன்னேன். 

உங்களுக்கு நிலம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அதற்கு தகுந்தார் போல் உங்களுக்கு செல்வ வளத்தையும் கொடுக்கும்.கையில் பணம் இருந்தால் தானே நிலம் வாங்கலாம். உங்களுக்கு பணம் சந்திரனின் புத்தியிலேயே கிடைக்கும். செவ்வாயின் புத்தியில் நிலம் வாங்குவதற்க்கு வழி பிறக்கும்.

பெரிய தொழிற்சாலைகளை நீங்கள் தொடங்குவதற்க்கு வாய்ப்பு வரும். அதிகமான முதலீடு செய்து தொழில் தொடங்குவார்கள் அல்லவா அது போல் நீங்கள் தொடங்கலாம்.

செவ்வாய் புத்தி சரியில்லை என்றால் நிலத்தை விற்க்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டு உங்களுக்கு அறுவைசிகிச்சை கூட செய்வதற்க்கு நிலை ஏற்பட்டுவிடும்.

அந்தரநாதர்கள்

செவ்வாய் 0 மாதம் 19 நாள்
ராகு       1 மாதம் 20 நாள்
குரு       1 மாதம் 14 நாள்
சனி       1 மாதம் 23 நாள்
புதன்     1 மாதம் 17 நாள்
கேது    0 மாதம் 19 நாள்
சுக்கிரன் 1 மாதம் 26 நாள்
சூரியன் 0 மாதம் 16 நாள்
சந்திரன் 0 மாதம் 28 நாள்


நண்பர்களே சொந்த வேலையாக வெளியூர் செல்வதால் வெளியூரில் இருந்து நேரம் கிடைக்கும்பொழுது பதிவுகள் தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: