Followers

Saturday, January 18, 2014

புத்துணர்ச்சி


வணக்கம் நண்பர்களே!
                    ஊரில் இருந்து சென்னை வந்து சேர்ந்துவிட்டேன். ஊரில் இருந்த நாட்களில் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வேலையில் தான் அதிகம் கவனம் செலுத்தினேன்.சென்னையில் இருக்கும்பொழுது தொடர்ச்சியாக போன்கால்கள் வந்துக்கொண்டே இருக்கும். தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அமைதியாக எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

அமைதியான ஒரு பகுதியில் இருக்கும்பொழுது மட்டுமே இது வரை என்ன செய்துக்கொண்டு இருந்தோம் இனி என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவரும். இருந்து அத்தனை நாளும் அம்மனுக்காக விசேஷபூஜை செய்துக்கொண்டே இருந்தேன்.

இந்த நாட்களில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் அவ்வப்பொழுது உதவி செய்துக்கொண்டிருந்தது அம்மன். மீதி நேரங்களில் அதற்கு பூஜை செய்ததால் அது நான் இருந்த இடத்திலேயே இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக எனக்கு இருந்தது.

இனிவரும் காலங்களில் புதுவித உத்வேகத்தோடு அம்மன் செய்யும். அதற்க்காக தான் இத்தனை நாள் ஊரில் இருந்ததின் காரணம்.அது எப்படி வேலை செய்யவேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்கும் விசயங்கள் தான் நான் செய்துக்கொண்டிருந்தேன். தெய்வமாக இருந்தாலும் நமது கோரிக்கையை நிறைவேற்ற என்ன செய்யவேண்டும் என்பதை எல்லாம் செய்யவேண்டும் அப்பொழுது மட்டுமே நாம் சொல்லுவது போல் செய்யும். இந்த வேலையில் இருந்ததால் என்னால் பதிவு கூட எழுதமுடியவில்லை. இனி தொடர்ச்சியாக நாம் பதிவுகளை பார்க்கலாம்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: