Followers

Thursday, January 30, 2014

மனித வாழ்வு


வணக்கம் நண்பர்களே!
                    மனித வாழ்க்கையை நினைத்து பார்த்தால் ஒன்றுமே இல்லை என்று தோன்றுகிறது. இன்றைய அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கின்றனர் ஆனால் விரைவில் நமக்கும் இப்படி கொடுப்பார்கள் என்று நினைத்து பார்த்தால் வாழ்க்கின்ற வாழ்க்கையை நன்றாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தான் மட்டும் பல காலங்கள் பூமியில் வாழபோகின்றனர் என்று நினைத்துக்கொண்டு அனைத்து வில்லங்கத்தை செய்கின்றனர். தான் நிற்க்கும் மண் தன்னை தின்பதற்க்கு தயாராக இருக்கின்றது என்று நினைப்பதில்லை.

நான் நிறைய பேர்களிடம் சொல்லுவேன் சார் எப்படியும் ஒரு ஆன்மீக பயிற்சியாவது செய்துக்கொள்ளுங்கள். அது உங்களை இந்த ஜென்மத்திலும் மற்றும் எதிர் ஜென்மத்திலும் காப்பாற்றும் என்று சொல்லுவேன். ஒருவரும் காதில் வாங்கிப்போட்டுக்கொள்வதில்லை. 

சும்மா வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்த்தால் இப்பொழுது பிறந்ததுபோல் இருக்கும் மரணவாயில் நின்றுக்கொண்டு இருப்பார்கள். காலம் போய்க்கொண்டு இருக்கின்றது. வீணாக இருக்காமல் ஆன்மீகத்தை உங்களுக்குள் வரவழைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

தூங்கும்பொழுதும் மூச்சு நிற்கலாம். விழித்துக்கொண்டு இருக்கும்பொழுதும் மூச்சு நிற்கலாம். மனிதவாழ்வுக்கு எந்தவித கியாரண்டியும் கிடையாது. கிடைத்த மனிதவாழ்க்கையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: