Followers

Sunday, January 19, 2014

நம்பிக்கை


வணக்கம் நண்பர்களே!
                     பணத்தின் மீது அதிக ஆசை அனைவருக்கும் ஏற்படுகிறது. பணம் இல்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது என்று அனைவருக்கும் தெரிந்த விசயம்.

ஆன்மீக பயிற்சி செய்யும் காலங்களில் நான் பணம் வந்தால் அதனை செலவு செய்யாமல் பத்திரமாக வைத்திருப்பேன். அப்பொழுது குரு சொல்லுவார் வருகின்ற பணத்தை அன்றைய தினமே செலவு செய் என்பார். அடுத்த நாளுக்கு உனக்கு பணம் வரும் என்பார்.

நான் இளமையில் வறுமையின் பிடியில் இருந்ததால் அதனை எப்படி சேமிக்கலாம் என்று தான் இருப்பேன். அவர் பணத்தை பார்த்துவிட்டு முதலில் இதனை செலவு செய் என்பார். உன்னிடம் ஒரு சக்தி இருக்கும்பொழுது அந்த சக்தி உன்னை எந்த நேரத்திலும் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை வை என்பார். நான் அன்றே அந்த பணத்தை செலவு செய்தால் அடுத்த நாள் பணம் தேடி வரும். அது எப்படி நடக்கின்றது என்று தெரியாது பணம் எதாவது ஒரு வழியில் தேடி வந்துவிடும்.

பயிற்சி காலத்தில் அந்தளவுக்கு நான் நம்பிக்கை எல்லாம் வைக்கவில்லை. ஆனால் இப்பொழுது இருநூறு சதவீதம் நம்பிக்கை இருக்கின்றது. உலகமே நம்மை விட்டு சென்றாலும் நம்மால் நிற்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒரு சக்தியை நீங்கள் எடுத்துவிட்டால் உங்களை அது காப்பாற்றும் நீங்கள் எதனைப்பற்றியும் கவலைப்படதேவையில்லை. உங்களின் தேவை அறிந்து அது உங்களுக்கு நிறைவேற்றிக்கொண்டே இருக்கும்.

இது சாதாரமாக ஒருவர் வாழ்வதற்க்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றிக்கொடுக்கும். பெரிய அளவில் பணம் தேவை என்ற நிலை ஏற்படும்பொழுது பல வேலைகளில் இறங்கி சம்பாதிப்பது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: