Followers

Friday, January 31, 2014

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    இப்பொழுது விருச்சிக ராசியில் உள்ளவர்கள் அனைவரும் பிரச்சினையில் இருக்கின்றார்கள். அதிலும் இந்த செந்தி்ல் என்று பெயர் கொண்டவர்களுக்கு பிரச்சினை அதிகம்.

எனது நண்பர் ஒருவர் சிங்கபூரில் இருந்து போன் செய்து எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னார். அந்த நண்பர் என்னை வந்து சந்தித்து பேசி இருக்கிறார். ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கும் வந்திருக்கிறார். எங்களின் வீட்டிற்க்கும் வந்திருக்கிறார். நான் யார் என்று தெரிவதற்க்கு முன்னரே எனக்கு நிறைய செய்திருக்கிறார். நான் அணிந்திருக்கும் இருக்கும் கடிகாரம் கூட அவர் எனக்கு கொடுத்தது தான்.

அவர் என்னிடம் பேசும் பொழுது ஒரு வாரங்களுக்கு முன்பு பேசினார். சார் வேலை இல்லாமல் இருக்கின்றேன். வேலை இல்லாமல் சிங்கபூரில் எவ்வளவு நாளும் இருக்கலாம் ஆனால் வேலை இல்லாமல் இருப்பது எனக்கு கஷ்டம்போல் இருக்கிறது வீட்டிலேயே எத்தனை நாள் இருக்கின்றது என்று சொன்னார். அவர் விருச்சிக ராசி என்று சொன்னார் சரி இப்பொழுது உங்களுக்கு நேரம் சரியில்லை இருந்தாலும் பரவாயில்லை அம்மனிடம் வேண்டுதல் வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.

அவர் சொல்லிமுடித்தவுடனே நான் வேலையை தொடங்கிவிட்டேன். அம்மனை நம்புகிறவர்களுக்கு பிரச்சினையா என்று நினைத்துக்கொண்டு ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் என்ன செய்யமுடியும். மறுநாள் காலையில் எனக்கு நண்பர் போன் செய்தார். சார் நன்றி வேலை கிடைத்து விட்டது என்றார். 

அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். ஏன் என்றால் எந்த ஒரு பயனும் அடைவதற்க்கு முன்பே எனக்காக நிறைய செய்தவர் அவர். அப்படி என்றால் எப்பேர்பட்ட நம்பிக்கை என் மீது அவருக்கு இருக்கும் அதனால் செய்தேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: