Followers

Thursday, January 9, 2014

ஆன்மீக அனுபவங்கள் 147


ணக்கம் ண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னை சந்தித்தார் அவர் என்னிடம் பேசும்பொழுது அசைவம் சாப்பிடுவதால் கர்மம் கூடுதல் தானே ஆகும் எப்படி நீங்கள் அசைவம் சாப்பிட சொல்லுகிறீர்கள். 

அசைவம் சாப்பிடுவதால் கர்மம் வந்துவிடும் என்று சொல்லுகிறீர்கள். சரி சைவம் சாப்பிடுபவர்கள் நன்றாக இருக்கின்றனரா என்று கேள்வி கேட்கமுடியும். இந்த கேள்வி எல்லாம் கேட்பவர்கள் யாராக இருக்கின்றனர் என்றால் இல்லறத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் தான் கேள்வி கேட்கிறார்கள். 

ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு மோட்சம் என்பது அவர்களின் துணையை பாதுகாத்து நல்லமுறையில் வைத்திருந்தால் போதும் இறைவன் உங்களுக்கு மோட்சத்தை கொடுத்துவிடுவார்.

சைவம் சாப்பிடுவதை வரவேற்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை. பெரும்பாலான சைவம் சாப்பிடுவர்கள் எப்படி இருக்கின்றனர் என்று நீங்களே பார்ததாலே தெரிந்துக்கொள்ளமுடியும். மிகபெரிய அயோக்கியனாக இருப்பார்கள். இவர்கள்  கட்டிய மனைவியை விட்டுவிட்டு வேறு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொள்கின்றனர்.

நடப்பது என்ன சைவத்தை சாப்பிட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் பூஜை செய்வது. நேராக அலுவலகத்திற்க்கு சென்றவுடன் அடுத்த துணையை நாடுவது. முடிந்தளவுக்கு திருடுபவர்கள் இவர்களாக தான் இருக்கின்றனர். இல்லறத்தில் இருப்பவனுக்கு அவன் கட்டிய மனைவி கண்கலங்கினால் கண்டிப்பாக அவனுக்கு மோட்சம் என்பது கிடையாது. ஆயிரம் கடவுளை விழுந்து வணங்கினாலும் கண்டிப்பாக அவனுக்கு ஒன்றும் கிடைக்காது

கர்மத்தை விட்டுவிடுங்கள் அதனை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒரு மனிதன் அசைவம் சாப்பிட்டால் அவனுக்கு எப்படி கீழ்தரமான எண்ணங்கள் உருவாகும். உலகத்தில் ஒரு மதத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அசைவம் சாப்பிடுகின்றனர் அவர்கள் அனைவரும் கையில் ஆயுத்துடன் தான் செல்லுகின்றனரா? அவர்களுக்கு அசைவம் கிடைக்கவில்லை என்றால் கட்டிய மனைவியை கடித்து தின்கின்றனரா? அல்லது பெற்ற பிள்ளையை கொன்று சாப்பிடுகின்றனரா?

அவனிடம் பாசம் காதல் எல்லாம் தானே இருக்கின்றது. அப்படி இருக்கும்பொழுது ஒரு அசைவ உணவு என்பது எப்படி கீழ்தரமான எண்ணங்களை உருவாக்கமுடியும்?

பிரமாணர்கள் அசைவம் சாப்பிடாதர்க்கு காரணம் அவர்களின் முதல் வேலை கோவிலில் பூஜை செய்வது கோவிலுக்கு வருபவர்களுக்கு பூஜை செய்துக்கொடுபதாகவே இருந்தது. 

அசைவம் சாப்பிடும்பொழுது என்ன ஒன்று என்றால் அடிக்கடி கழிப்பறையே தேடி போகவேண்டும். தன்னுடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற செல்லவேண்டும். அந்த காலத்தில் கோவில்களில் கழிப்பறை வசதி எல்லாம் கிடையாது அதனால் அவர்களை அந்த கால மன்னர்கள் நீங்கள் மிதமான உணவை மட்டும் சாப்பிட்டு வாருங்கள் என்று சொன்னார்கள் அந்த காரணத்தால் மட்டுமே பிராமணர்கள் சைவத்தை சாப்பிட்டார்கள். இன்றைய காலத்தில் கோவிலுக்குள் பெட் மட்டும் தான் இல்லை. அனைத்து வசதியும் கொடுத்தாகிவிட்டது.

பிராமணர்கள் தான் சைவம் சாப்பிடுகின்றனரே இவர்களுக்கு பிரச்சினை என்பது இல்லையா? இவர்கள் தான் கடவுளுக்கு பக்கத்தில் இருக்கின்றார்களே இவர்களுக்கு ஏன் பிரச்சினை வருகிறது. ?

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: