Followers

Tuesday, January 28, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 18


வணக்கம் நண்பர்களே!
                    மூன்றாவது வீட்டில் ராகு கேது இருந்தால் அது பித்ரு தோஷம் என்று சொல்லுகிறார்கள். மரணத்திற்க்கு ஒப்பான நிகழ்வு போல தான் இது இருக்கும். ஒரு செயலை ஆரம்பிக்கும்பொழுது தடை ஏற்பட்டால் அது நமக்கு பிரச்சினை இல்லை ஆரம்பித்தோம் பிரச்சினை வந்தது விட்டுவிட்டோம் என்று சொல்லிவிட்டு போய்விடுவோம் ஆனால் கடைசியில் முடியும் தருவாயில் அது தடைப்பட்டால் எப்படிப்பட்ட வெறுப்பு நமக்கு வரும் என்னடா இப்படி சென்றுவிட்டதே என்று தோன்றும். சிகரத்தின் உச்சியை தொடும்பொழுது கீழே தள்ளிவிட்டால் எப்படி இருக்கும்.

ஒரு நிகழ்வில் முடிந்தால் பிரச்சினை இல்லை எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நடைபெறும்பொழுது தான் நமக்கு மிகப்பெரிய வெறுப்பு நமது வாழ்க்கையில் வருகிறது.மூன்றாவது வீடு ஆயுளை காட்டினாலும் மரணத்திற்க்கு ஒப்பான ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்று தான் சொல்லவேண்டும். இவர்கள் அடிப்பட்டு அடிப்பட்டு அட போடா வாழ்க்கை இது தான் என்று நினைக்கதோன்ற வைப்பதில் கில்லாடிகள் ராகு கேதுக்கள்.

இது ஏற்பட்டதற்க்கு காரணம் நம்மை அப்படி ஒரு தாக்குதலை நடத்துகிறது ஆத்மாவாகவும் இருக்கலாம் அல்லது முன்ஜென்மத்தில் நாம் செய்த கர்மாவாகவும் இருக்கலாம். இரண்டும் ஒன்று தான். 

ஒரு வழி நமது முன்னோர்கள் வழியில் எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்த்து அவர்களை கேட்டு சம்பந்தப்பட்ட நபர்களின் வாரிசுகள் இருந்தால் அவர்களுக்கு உதவலாம் அலலது இராமேஷ்வரம் அல்லது திருப்புல்லாணி போன்ற இடங்களுக்கு சென்று பித்ரு காரியங்களில் ஈடுபடலாம். 

இந்த பிரச்சினைக்கு நீங்கள் வழி செய்யவில்லை என்றால் உங்களின் வாழ்வில் பல சோதனைகளை கண்டு நொந்துவிடுவீர்கள்.வாழ்ந்த வாழ்வு ஒரு நொந்தவாழ்வாக மரணத்தைபோல் இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: