Followers

Tuesday, January 21, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 15


ணக்கம் ண்பர்களே!
                    அனைத்து கிரகங்களும் ஆப்பு அடிக்கும் என்று இருந்தும் ஒரு சிலர் அழகாக தன் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். இவர்களை பற்றி நீங்கள் நினைத்திருந்தால் கண்டிப்பாக கிரகங்களை மீறி நாம் செயல்படமுடியும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். நாம் சோதிடத்தை பார்ப்பதே வருடத்திற்க்கு ஒரு முறை இதில் எங்கு போய் இதனை எல்லாம் நினைப்பது என்று தோன்றும்.

ஒரு மனிதன் பிறந்துவிட்டால் அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழவேண்டும் என்று நினைக்கவேண்டும் நொந்து உட்கார்ந்துக்கொண்டு விதியை சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. விதியை மதியால் வெல்லவேண்டும் என்று சும்மாவா சொல்லிருப்பார்கள். வெல்லமுடியும் என்பதை தான் சொல்லிருக்கிறார்கள். 

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பணக்காரர்களுக்கு பின்பும் பல ஆன்மீகவாதிகள் உங்களை போல் சோதிடர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் செய்யும் செயலால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து தன் நிலையை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

நாம் என்ன சொல்லிக்கொண்டிருப்போம் விதியை குறைச்சொல்லிக்கொண்டிருப்போம்.இன்னமும் கொஞ்சம் மேலே போய் முன்னோர்கள் சொன்னதை எல்லாம் எடுத்துக்கொள்ளமுடியாது அது எல்லாம் முட்டாள்தனம் என்று சொல்லுவோம். முதலில் எதனையும் தள்ளிவிடமுடியாது. முன்னோர்கள் சொன்னவழியில் பல வழிகள் கிரகங்களை மீறி செய்யமுடியும் என்று இருக்கும்பொழுது நாம் ஏன் அதனை குறைச்சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்.

இன்றைக்கு நாத்திகம் பேசும் கட்சிகளுக்கு எல்லாம் ஆஸ்தான சோதிடர்களின் அறிவுரைப்படி நடக்கும்பொழுது நீங்கள் ஏன் இதனை எல்லாம் நம்பகூடாது. கிரகங்கள் சரியாக தன் வேலையை செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது ஆனால் கிரகங்களை மீறி ஒரு சக்தி இருக்கின்றது என்பதனை மறக்ககூடாது.

எந்த கிரகத்தை எப்படி செய்தால் தப்பிக்கமுடியும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். எந்த கிரகத்திற்க்கு என்ன செய்தால் சாந்தப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியும். அப்படி இருக்கும்பொழுது அதனை செயல்படுத்தவேண்டியது தானே.

இதனைப்பற்றி மேலும் விபரங்களுக்கு என்னை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: