Followers

Wednesday, January 1, 2014

அம்மனின் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பல பேர்க்கு நானே போன் செய்து பேசினேன். அதற்கு காரணம் அவர்களுக்கு நமது அம்மன் துணை செய்யும் என்ற காரணத்தால் மட்டுமே. 

பெண்களுக்கும் போன் செய்து பேசினேன் அவர்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களின் பிரச்சினைக்கு அம்மன் ஒரு நல்லவழியை ஏற்படுத்தி தரும் என்ற காரணத்தால் உங்களுக்கு போன் செய்தேன். பொதுவாக பெண்களை போனில் தொடர்புக்கொண்டு பேசுவது கிடையாது. 

சம்பந்தப்பட்ட பெண்கள் நீங்கள் தொடர்புக்கொண்டு பேசலாம் என்று சொன்னால் மட்டுமே பேசுவேன். மற்றபடி தொடர்பு கொள்வது கிடையாது. நான் தொடர்புக்கொண்டு பேசிய அனைவருக்கும் அம்மன் பூரண அருளை அள்ளி தரும். இன்றும் என்னை பார்க்க ஒரு சில நண்பர்கள் வந்திருந்தனர் புத்தாண்டில் எவ்வளவோ விசயங்கள் உங்களை சுற்றி நடக்கும்பொழுது என்னை பார்க்க வரவேண்டும் என்று எண்ணி வந்த உங்களுக்கு அம்மனின் முழு சக்தியும் கிடைக்கும். 

வந்த ஒரு நபருக்கு அவர் சென்ற பதினைந்தாவது நிமிடம் வேலை செய்ய ஆரம்பித்தது குறிப்பிடதக்கது. லட்சக்கணக்கில் பணத்தை ஒரு விசயத்திற்க்காக இழந்தவர் அவர். அந்த நபரின் கண்ணீரை துடிப்பதற்க்காக அம்மனை முழுவீச்சில் இறக்கி செய்ய வைத்திருக்கிறேன். 

என்னை பார்க்க வந்த அனைத்து நண்பர்களுக்கும் விரைவாக பல நல்ல நிகழ்ச்சிகள் உங்களின் வாழ்க்கையில் நடைபெறுவதை உங்களின் கண் முன்பு தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: