Followers

Thursday, November 21, 2013

ஆன்மீக அனுபவங்கள் 134


ணக்கம் ண்பர்களே!
                     என்னிடம் ஒரு சில நண்பர்கள் பேசும்பொழுது உங்களின்  அம்மனிடம் கேட்டுச்சொல்லுங்கள் என்று சொல்லுவார்கள். அதாவது எனக்கு மட்டும் சொந்தமான அம்மன் என்பது போல் பேசுவார்கள். அப்படி எல்லாம் கிடையாது. அனைவருக்கும் சொந்தமான சக்தியை பயன்படுத்துகிறேன்.

தன் சக்தி என்ன என்று உணர்ந்துக்கொண்டு அதனை பெருக்குவதற்க்கு பிரபஞ்ச வழியில் உள்ள சக்தியை எடுப்பது மட்டுமே அம்மன் சக்தி என்கிறோம். பிரபஞ்சத்தில் உள்ள சக்தி உங்களிடம் இருக்கின்றது. அந்த சக்தியை ஒரு எல்லைக்குள் நீங்கள் பயன்படுத்துவீர்கள். அந்த சக்தியை அதிகப்படுத்தி வெளியில் உள்ள சக்தியோடு தொடர்புக்கொள்கிறேன். 

உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனிடம் இந்த சக்தி இருக்கிறது. அதனை ஒரு எல்லைக்குள் நிறுத்திவிடுகிறீர்கள். உங்களின் பயன்பாட்டிற்க்கு மட்டுமே அந்த சக்தி  பயன்படுகிறது.

நீங்களே இதனை சோதனை செய்து பார்க்கலாம். யாரையாவது நீங்கள் நினைத்தால் உடனே அவர் உங்களுக்கு போன் செய்வார். இது எல்லாம் உங்களின் சக்தி செய்யும் ஒரு விசயம் மட்டுமே. இப்படி நடைபெறுவது எப்பொழுதாவது ஒரு முறை நடைபெறும் செயல்.

உங்களின் சக்தி ஒரு வரையறுக்குள் நிற்கிறது என்று அர்த்தம். அதனை மேம்படுத்த வேண்டும். உங்களின் சக்தி பிரபஞ்ச சக்தியோடு இணையவேண்டும். அப்பொழுது நீங்களும் சக்தி படைத்த ஆள்தான்.

பிரபஞ்சத்தில் என்ன சக்தி இருக்கின்றதோ அதே சக்தி மனிதனிடம் இருக்கின்றது. அந்த சக்தி இல்லை என்றால் உடல் இயங்காது. அந்த சக்தி என்று நம் உடலை விட்டு செல்லுகிறதோ அன்று நாம் இறந்துவிடுகிறோம். நமது சக்தியை வைத்து அந்த பிரபஞ்ச சக்தியை நாம் தொடும்பொழுது நாம் நினைத்து காரியத்தை சாதிக்கமுடியும்.

உங்களை உணருங்கள் என்று மகான்கள் சொல்லுவது எல்லாம் இதனை வைத்து தான் சொல்லுகிறார்கள். இதனை செய்வது எல்லாம் ஒரு நல்ல குரு வழிகாட்டுதலின் பேரில் செய்யும்பொழுது நமக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: