Followers

Friday, November 29, 2013

கேள்வி & பதில்


ஸ்ரவாணி said...

பொதுவாக சனி முன்ஜென்ம வினையையும் குரு இந்த ஜென்மத்தில் 
நாம் செய்யும் நற்காரியங்களையும் குறிக்கும் , அதாவது இந்த ஜென்மத்துப் 
பலனையும் தரும் என்று சொல்வர். இதில் குரு எப்படி பூர்வபுண்ணியத்திற்குக் 
காரகம் வகிக்க முடியும் ? அப்படி என்றால் முன்ஜென்மத்தில் பாவம் செய்து இருந்தால் 
சனியும் புண்ணியம் செய்து இருந்தால் குருவும் பலன்களைத் தரும் என்று 
கொள்ளலாமா ? என் நீண்ட நாளைய சந்தேகம் இது. 

தனியாகப் பதிவிட்டு விளக்கினாலும் சந்தோசம் கொள்வேன். நன்றி

தங்களின் கேள்விக்கு நன்றி. முன் ஜென்மத்தில் நாம் செய்த தவறை சரியாக கணக்கு எடுத்து வைத்திருப்பார். அதில் தவறுகள் இருக்கும். குரு நாம் செய்யும் நல்லபலனை தரும் கிரகம். குரு தான் பூர்வபுண்ணியத்திற்க்கு காரகம் வகிக்கிறார். புண்ணியம் என்று வந்தாலே நாம் செய்யும் நல்லது என்று அர்ததம். முன் ஜென்மத்தில் நல்லது செய்திருக்கலாம் அதற்கு இப்பொழுது பலனை தருவதற்க்கு குரு தயாராக இருப்பார். சனி தவறை வைத்து தண்டனை தருவதற்கு இருப்பார்.

குருவின் பார்வையும் எடுத்துக்கொள்ளும்பொழுது ஐந்து மற்றும் ஒன்பதாவது பார்வை என்று வைத்திருக்கிறார்க்ள். பூர்வபுண்ணியம் மற்றும் பாக்கியம் என்ற கணக்கில். குருவின் பார்வை நல்லதை செய்யும். சனியின் பார்வை தீயவை செய்யும். 

பூர்வபுண்ணிய அதிபதி கெட்டிருதால் குழந்தை இருக்காது அப்பொழுது என்ன செய்வார்கள் குரு நன்றாக இருக்கின்றதா என்று பார்ப்பார்கள். இது எல்லாம் குரு நன்மையை தரும் என்ற கணக்கில் மட்டுமே.

குரு நன்றாக இருக்கும்பட்சத்தில் குழந்தை இருக்கும். பூர்வபுண்ணியம் என்பதற்க்கு குரு அதிகம் காரத்துவம் வகிக்கிறார். 

தெரிந்ததை சொல்லி இருக்கின்றேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

KJ said...

Thanks sir.

So, Sani will not do good for the native in his dasa, if 5th house or 5th house owner is not in good position?

Anonymous said...

விளக்கத்திற்கு நன்றி.