Followers

Saturday, November 30, 2013

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                   இன்று சனிக்கிழமை சனியின் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பை சாத்துவதற்பக்கு பல நண்பர்களுக்கு செய்ய சொல்லிருந்தேன். அவர்கள் பல பேர்கள் காலையிலே சாத்திவிட்டு போன் செய்தார்கள். பலர் மாலை நேரத்தில் செய்கிறேன் என்று சொல்லியுள்ளார்கள்.

ஏற்கனவே செய்தவர்களாக இருந்தால் இன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துங்கள். அப்படி முடியவில்லை என்றால் நெய்தீபம் ஏற்றுங்கள். சனிக்கும் சேர்த்து ஒரு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றிவாருங்கள்.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவாருங்கள். சனியின் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அது உங்களை விட்டு விலகுவதற்க்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் குளியல் அவசியம். 

இப்பொழுது எல்லாம் மக்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது கிடையாது. இதனை பல பேர் மறந்துவிட்டார்கள். இளம் வயதினருக்கும் இதனைப்பற்றி சொல்லி தரவில்லை.

இதனை படிக்கும் நீங்கள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை உங்களது வாரிசுக்களுக்கு சொல்லி கொடுங்கள். உடலுக்கும் நல்லது மற்றும் சனியின் பாதிப்பில் இருந்து வெளிவருவதற்க்கும் நல்லது.

இதனைப்படித்துவிட்டு உடனே சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். முதலில் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும்பொழுது எண்ணெய் தேய்த்து அதிக நேரம் வைத்துவிட்டு குளிக்காதீர்கள். ஜலதோஷம் பிடித்துவிடும். எண்ணெய் தேய்த்து ஐந்து நிமிடத்தில் குளித்துவிடுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: