Followers

Tuesday, November 5, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 73


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவின் பலன்களில் காலையில் ஒரு பதிவில் ராகுவும் சூரியனும் சேர்ந்து இருந்து தசா நடைபெறும்பொழுது என்ன பலனை தரும் என்று சொல்லிருந்தேன் அல்லவா. ஒரு உதாரண ஜாதகத்தோடு நாம் பார்க்கலாம்.

லக்கினம் விருச்சிகம் அதன் அதிபதியான செவ்வாய் பனிரெண்டாவது வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார். ராசியாக ரிஷபம் வருகிறது. பனிரெண்டாவது வீட்டை பாருங்கள் அங்கு நான்கு கிரகங்கள் அமர்ந்திருக்கிறது. ராகுவோடு சூரியன் செவ்வாய் புதன் அமர்ந்திருக்கிறது.

நோயை கொடுப்பதில் அதிகமாக பங்குக்கொள்வது ஆறாவது வீடு தானே. செவ்வாய் கிரகம் அதற்க்கு காரகத்துவம் வகிக்கிறது. அவர் ராகுவோடு தான் இருக்கிறார். ஆறில் கேது அமர்ந்திருக்கிறது. எட்டாவது வீட்டு அதிபதியான புதனும் பனிரெண்டாவது வீட்டில் சேர்ந்துவிட்டார். 

இவரின் ஜாதகத்தை பார்த்தவுடன் உங்களுக்கு தெரிந்துவிடும் இது ஒரு பாவப்பட்ட ஜாதகமாக இருக்கும் என்று தெரிந்திருக்கும். முன்பு ஜென்ம பாவமாக கூட இருக்கலாம் அல்லவா. அதனை இந்த ஜென்மத்தில் அனுபவித்துவிட்டு இதோடு கடவுளிடம் போய் சேர்ந்துவிடுவார் என்று தோன்றும். இனி ஜென்மம் எடுக்க வாய்ப்பில்லை என்பதை கேதுவை வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.

கேதுவும் ஆறில் இருக்கின்றது. கேது பனிரெண்டாவது வீட்டில் இருந்தால் தானே மோட்சம் கிடைக்கும். நீங்கள் என்ன ஆறில் என்று நினைப்பீர்கள். பங்காளியான ராகு தான் பனிரெண்டில் நிற்கிறது. கேது நிற்க்கும் வீட்டின் அதிபரான செவ்வாயும் பனிரெண்டில் நிற்கிறது. அப்புறம் என்ன இதுவோடு மனிதபிறவி முடிந்தது என்று சொல்லிவிட்டால் போதும். செவ்வாய் லக்கினாதிபதியாக இருக்கின்றார். லக்கினாதிபதி போய்சேரும் இடமான பனிரெண்டில் நின்றுக்கொண்டு நான் இனிமேல் பிறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார். ஆத்மாக்காரனான சூரியன் பனிரெண்டாவது வீட்டில் இருக்கின்றார் பிறகு என்ன முடிந்தது கதை.

கடைசிப்பிறவி என்பது ஒரு கொடுமையாக தான் இருக்கும். இதுவரை செய்த பாவங்களை எல்லாம் சுத்தமாக இங்கேயே விட்டுவிடவேண்டும் என்பதால் போட்டு காய்ச்சி எடுத்துவிடுவான் இறைவன். 

இவருக்கு ராகு தசா ஆரம்பித்த காலத்தில் இருந்தே இவர்க்கு நோய் வந்தது படுத்த படுகையாக இருந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். ராகு கேது எல்லாம் கோமா நிலைக்கு கொண்டு சென்று கொல்வதில் வல்லவர்கள். கோமா நிலைக்கு அது மட்டும் காரணம் இல்லை இந்த ஜாதகத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன அதனை நீங்களே தெரிந்துக்கொள்ளமுடியும். 

சரியாக ராகு தசா சந்திரன் புத்தியில் இந்த உலகை விட்டு சென்றுவிட்டார்.மோட்சத்திற்க்கு குருவும் துணை நிற்கவேண்டும். சந்திரன் குருவோடு நிற்கிறார். கண்டிப்பாக மோட்சத்தை அடைந்திருப்பார். 

ஒரு சிலருக்கு இப்படி தான் ஜாதகம் எக்குதப்பா அமைந்துவிடும் என்ன செய்வது மனிதபிறப்பே பாவத்தை போக்க தானே என்ன நமக்கு கொஞ்ச நாள் ஆகலாம். இந்த தண்டனையை நாம் ஏற்க. கண்டிப்பாக தண்டனை உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

Arul said...

Dear Rajeshsubbu

For me also Kethu in 6th house. and 12th place Rahu. but when 6th kethu bukthi I got hike(career). and 12th (Rahu) Bukthi , I have constructed my house. and it is not related to Rahu is 12th & Kethu is 6th House. Both the House is good for Rahu and Kethu. If kethu is 6th position- No enemy and they will get benefit from Enemy. Rahu is 12th place and that house owner is where ?- we have to check. and Ayul Adhibadhi & mandhi & Natchathira Saram also should check. In that situation, Natchathira saram is "Vibatthu Thara". Combined effect he may passed away.

Thanks & Regards
Arul Kumar Rajaraman

rajeshsubbu said...

வணக்கம் சார் உள்ளே புகுந்து பார்த்தால் ஏகாப்பட்ட விசயங்களை கண்டுபிடித்து எழுதலாம். உங்களுக்கு சோதிட அறிவு அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள். நன்றி.