Followers

Friday, November 15, 2013

நம்பாதீர்கள்


வணக்கம் நண்பர்களே!
                     தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவரை கும்பிட்டால் பணக்கஷ்டம் தீரும் என்று சொல்லுகிறார்களே உண்மையா என்று எனது நண்பர் ஒருவர் கேட்டார்.

இந்தியாவே கடனில் மூழ்கிக்கொண்டு இருக்கின்றது. இந்த பைரவரை வைத்து தேய்பிறை அஷ்டமி அன்று ஒரு மிகப்பெரிய பூஜை செய்யலாம். என்ன செய்வது அதனை செய்ய ஒரு ஆன்மீகவாதிக்கும் மனம் இல்லை ஏன் என்றால் நாட்டைப்பற்றி அக்கறை கிடையாது. 

ஒரு தெய்வத்திடம் ஒரளவு மட்டுமே வேண்டுதல் வைக்கமுடியும். அதுவும் பணம் சம்பந்தப்பட்ட விசயத்திற்க்கு ஒரு கடவுளும் அவ்வளவு எளிதில் இறங்கி செய்யமாட்டார்கள். கேளுங்கள் தரப்படும் என்று சொல்லுவது எல்லாம் நம் கடவுளிடம் நடக்காத ஒன்று.

கர்மத்தை தொலைக்க பிறப்பு எடுத்துவிட்டு கர்மத்தை மீண்டும் மீண்டும் எடுக்க கடவுள் அவ்வளவு எளிதில் வாய்ப்பை தரமாட்டார். மதகருத்து இப்படி இருக்கும் நிலையில் எப்படி பணத்திற்க்காக கடவுள் உங்களுக்கு செய்வார். 

மக்கள் அனைவரும் பணத்திற்க்காக போராடுகிறார்கள். இந்த போராட்டத்தை பயன்படுத்தி உங்களை ஒரு வகையில் ஏமாற்ற ஆன்மீகவாதி செய்யும் ஒரு தந்திரவழி தேய்பிறை பைரவவழிபாடு. தயவு செய்து தேய்பிறை வழிப்பாடு என்பதை நம்பாதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: