Followers

Sunday, November 3, 2013

ஏழைகளுக்கு அம்மன்


வணக்கம் நண்பர்களே!
                    நான் பல ஏழைகளுக்கு இலவசமாகவே அனைத்து ஆன்மீகசேவையும் செய்து தந்துக்கொண்டு இருக்கிறேன். பதிவு மூலமாக வரும் ஏழை மக்களுக்கும் செய்து தருவது உண்டு. 

பதிவில் வரும் பல கருத்துக்களை படித்துக்கொண்டு ஏழைமக்கள் பயம்கொள்கிறார்கள்.  ஏழைகளுக்கு செய்யும்பொழுது சார் அம்மன் ஏதாவது செய்துவிட போகிறது ஒரு நூறு ரூபாயாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்றும் சொல்லுவார்கள். முதலில் நீங்கள் தேவையில்லாமல் பயம்கொள்ள தேவையில்லை. ஏழைகளுக்கு தான் அம்மன் முதலில் உதவி செய்யும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும். நீங்கள் பணம் தரவேண்டும் என்று நினைக்க வேண்டாம்.

உங்களை போல் மக்களுக்கு செய்யும் சேவை தான் என்னை வாழவைக்கும். அந்த சேவை செய்யும்பொழுது மட்டுமே அம்மன் என்னோடு இருக்கும். இது ஒரு சுயநலமான ஒரு செயல் தான் என்னோடு அம்மன் இருக்கவேண்டும் என்ற காரணத்தால் நாம் செய்வது உண்டு.

நான் ஒரு சில ஏழைகளை பார்ப்பது உண்டு அவர்களும் என்னை வந்து சந்தித்து பேசுவார்கள். இவர்கள் ஒரு மாதிரியானவர்கள் எப்படி என்றால் பெருமை அடித்துக்கொள்வது நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று சொல்லும் ஆட்களை நான் புறகணிப்பது உண்டு. அப்படி வாழ்ந்தேன் என்றால் ஏன் என்னை தேடிவருகிறாய் நீயே வாழ்ந்துக்கொள்ளவேண்டியது தானே என்று விட்டுவிடுவது உண்டு. 

மனித வாழ்க்கை கீழே மேலே செல்வது இயற்கை. மேலே சென்றுவிட்டு கீழே வந்தபிறகு வீண் பந்தா எதற்கு நன்றாக இருந்தேன் இப்பொழுது போய்விட்டேன் என்று சொல்லிவிட்டால் நல்லது. வீண் பந்தா சொல்லிக்கொண்டு வந்தால் தயவு செய்து வராதீர்கள் உங்களுக்கு என்னி்டம் இருந்தோ அம்மனிடம் இருந்தோ எந்த ஒரு உதவியும் கிடைக்காது.

ஏன் கிடைக்காது என்றால் நீங்கள் இன்னும் திருந்தவில்லை என்று அர்த்தம். கீழே வந்தபிறகு திருந்தி வாழவேண்டும். அனைத்தையும் புரியவைக்க ஒரு வாய்ப்பை தருவதற்க்கு ஆண்டவன் செய்யும் ஏறபாடு தான் இது. நான் அனைத்தையும் புரிந்துக்கொண்டேன் என் வாழ்க்கையில் மேலே உயர்வதே நானும் வாழ்ந்து என்னால் ஒருவர் அல்லது பலரை நான் வாழவைக்கவேண்டும் என்று சொல்லி வந்தால் உங்களுக்கு உடனே உதவி அம்மனிடம் இருந்து கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: