Followers

Monday, November 4, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 71


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் எனக்கு போன் செய்து ராகு தசாவைப்பற்றி எழுதிவருகிறீர்கள் அதில் தீமையான பலன்களை மட்டும் எழுதிவருகிறீர்கள். ராகுவின் தசாவில் நல்லது நடக்காதா என்று கேட்டார்கள். 

ஒரு தீமையான கிரகம் தீமையை மட்டும் கொடுக்கும் என்று நாம் நினைக்ககூடாது. நல்லதையும் செய்யும். ராகு அதிகமான நன்மை அல்லது தீமையை செய்வதற்க்கு காரணம் நமது முன்ஜென்மம் தான் தீர்மானிக்கிறது. நல்ல இடத்தில் அமரும்பொழுது நல்லதை வாரி வழங்கும்.அப்படி ஒரு சிலரை நான் பார்த்திருக்கிறேன். ராகு நல்லது செய்ய அவர்கள் தீயவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை நல்லவர்களுக்கும் நல்லவழியில் வாரி வழங்கியிருக்கிறது. 

ஒரு சில குடும்பங்கள் ராகுவின் தசாவில் மிக உயர்ந்த இடத்திற்க்கு சென்று இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு அயல்நாட்டில் வேலை கிடைத்து அதிகமான செல்வத்தை குவித்திருக்கிறார்கள்.

ராகு எப்படி இருந்து தசா நடைபெற்றாலும் நாம் ஆன்மீகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டும்பொழுது அந்த தசாவில் நாம் மிகப்பெரிய அளவில் உயரமுடியும். அதாவது ராகுக்கு எதிராக கேது இருக்கின்றபொழுது நாம் அதனை வைத்து வெற்றி பெறமுடியும் என்பதை காட்டுகிறது. கேது ஞானக்காரன் அல்லவா. கேதுவின் அடையாளம் சாமியார். சாமியார்களை நாம் குருவாக ஏற்றுக்கொண்டால் போதும். ராகுவின் தசா நமக்கு கொட்டிக்கொடுக்கும்.

பல பணக்காரர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் யாராவது ஒரு சாமியாரை குருவாக வழிப்பட்டு வருவார்கள். அவர்களுக்கு எந்த நாளும் நல்லநாளாக அமையும். எப்படி அது தான் குருவின் ஆசி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: