Followers

Saturday, November 30, 2013

குரு யார்?


வணக்கம் நண்பர்களே!
                     ஒரு சில நண்பர்களை சந்திக்கும்பொழுது அவர்கள் சொல்லும் வார்த்தை. குருவை காட்ட வேண்டியதானே என்று கேட்பார்கள். அவர்களிடம் சொல்லும் ஒரு சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

எப்பொழுது நம்மை வெளிக்காட்ட தொடங்குகிறோமோ அப்பொழுது அந்த இடத்தில் ஒரு நோக்கம் இருக்கின்றது என்று அர்த்தம். குரு எதற்கும் ஆசைப்படதா ஒரு ஆள். எந்த இடத்திலும் தன்னை காட்டுக்கூடாது என்ற பிடிப்பில் உறுதியாக இருக்கின்றார். அவரின் விருப்பதால் அவரைப்பற்றி வெளியில் நான் சொல்லுவது இல்லை.

என்னை தேடிவரும் ஒரு சில சாமியார்களை பார்த்து ஒரு சில நண்பர்கள் இவரா உங்களின் குரு என்று கூட கேட்பார்கள். ஒரு சிலர் அந்த சாமியார்களிடம் தனியாக சென்று ஏமாந்தவர்களும் இருக்கின்றனர். நான் பல சாமியார்களிடம் தொடர்பு வைத்திருப்பது எனது தேவைக்காக வைத்திருக்கிறேன். அவர்களை நம்பி நீங்கள் போககூடாது. என்னையும் எனது குருநாதரையும் சேர்த்து பார்க்கவே முடியாது.

எனக்கு ஒரு தேடுதல் இருந்தது அந்த தேடுதலுக்காக நான் அலைந்தேன். அப்பொழுது குலதெய்வத்தின் அருளால் எனக்கு ஒரு குரு கிடைத்தார். குரு வழிகாட்டினார். அந்த தேடுதல் கிடைத்தது. குருவின் பங்கு 1 சதவீதம் மீதி இருக்கும் 99 சதவீதம் என்னுடையது. அனைவருக்கும் இதுபோல் மட்டுமே. எனக்கு தெரிந்தவரை குரு வேறு யார்க்கும் எதனையும் கற்று தரவில்லை என்று நினைக்கிறேன்.அவர் அடுத்தவர்களுக்கு கற்று கொடுத்தாலும் அதனைப்பற்றி கேட்கும் உரிமை எனக்கு கிடையாது.

எனது குரு எந்த ஒரு ஊடகத்திலும் இதுவரை வரவில்லை. அவர்க்கு தெரிந்தவரை கடவுளிடம் மட்டுமே எதிர்பார்ப்பார்.மனிதர்களிடம் அவர் எதையும் எதிர்பார்த்தது கிடையாது. அவர் அப்படி இருக்கும்பொழுது அவர் எப்படி வெளியில் தன்னை காட்டிக்கொள்வார். ஒரு வேளை அவர் விருப்பபட்டு நமது ஜாதக கதம்பத்தில் மட்டுமே வந்தாலும் வரலாம்.

நான் பார்த்தவரை குரு என்பவர்கள் கண்டிப்பாக தானாகவே சென்று கற்றுக்கொடுக்க மாட்டார்கள். நாம் தான் சென்று கற்றுக்கொள்ளவேண்டும். இப்பொழுது எல்லாம் ஆன்மீக சிறப்பு வகுப்புகள் எல்லா ஊர்களிலும் மற்றும் எல்லாம் நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றது. குருவாக இருப்பவர்கள் தேடி சென்று அனைவருக்கும் கற்றுக்கொடுக்கின்றனர். அந்தளவுக்கு மலிவாக ஆன்மீகம் இருக்கின்றது. 

இன்றைய காலகட்டத்தில் ஒரு உண்மையான குருவை தேடி கண்டிப்பது கடினம்.உண்மையாக இருப்பவன் வெளியில் தெரியமாட்டான். அவன் யாரையும் தேடி போகமாட்டான். ஒரு காலகட்டத்தில் குரு விருப்பபட்டால் நமது ஜாதக கதம்பத்தில் அவரைப்பற்றி செய்தியை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: