Followers

Friday, November 22, 2013

சுக்கிரனுக்கு பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                     இது எல்லாம் என்ன செய்யப்போகின்றது என்று நாம் ஒதுக்கிவைக்கும் கிரகங்கள் அதிக அளவில் மனிதர்களுக்கு பயன்தருகின்றது. அந்த வரிசையில் சுக்கிரனும் இடம் பிடிக்கின்றது.

சுக்கிரன் மட்டும் இல்லை என்றால் மனிதன் இன்று பட்டினியிலேயே செத்துவிடுவான். எந்த கிரகம் கோச்சார நிலையில் கெட்டாலும் சுக்கிரன் மட்டும் கெடாது. அப்படியே சுக்கிரன் கெட்டாலும் அதிகநாட்கள் கெடாது. ஏன் என்றால் மக்களின் மீது அதிகமான கருணை உள்ளவன் சு்க்கிரன்

ஒரு ஜாதகத்தில் குருவைப்போலவே சுக்கிரன் நன்றாக இருந்தால் அவனுக்கு அனைத்தையும் பெற்றுக்கொடுத்துவிடான் சுக்கிரன். சுக்கிரன் கொட்டிகொடுப்பதில் இவர்க்கு நிகர் யாரும் இல்லை என்றே சொல்லமுடியும். அந்தளவுக்கு செல்வவளத்தை கொட்டிக்கொடுப்பார்.. 

எங்களைப் பொருத்தவரை சுக்கிரனை வைத்து பல நல்ல காரியங்களை எங்களை நாடி வருபவர்களுக்கு செய்துக்கொடுக்கிறோம்.உங்களுக்கு சுக்கிரன் கெடுதல் பலனை தருகின்றார் என்றால் நீங்கள் செய்யவேண்டிய பரிகாரம் ஒன்றைப்பற்றி பார்க்கலாம்.

பிராமணர்கள் பூஜை செய்யாத அம்மன் கோவிலுக்கு வெண் நிறப்பட்டு எடுத்து அந்த அம்மனுக்கு சாத்துங்கள். நிறைய பூக்களை வாங்கிக்கொடுங்கள். உதிரி பூக்களை அம்மனுக்கு சாத்துங்கள். கீழே பரப்பிக்கூட வைக்கலாம். இப்படி சாத்தினால் சுக்கிரன் உங்களுக்கு நல்லதை செய்யும். உங்களின் செல்வவளமும் உயரும்.

உதிரி பூக்களைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். இப்பொழுது தான் அதற்கு சரியான நேரம். செடியில் இருந்து பறிக்கப்படும் உதிரி பூக்கள் தெய்வங்களுக்கு மிகவும் விஷேசமான ஒன்று. 

நாம் பூக்களை மாலையாக தொடுப்பது கூட நமது செயற்கை தன்மை வந்துவிடும். அனைத்தும் இயற்கையாக இருக்கும்பொழுது கடவுள் நமக்கு உடனே அருள் செய்வார். மாலை தொடுப்பதற்க்கு வாழைநார் பயன்படுத்தினால் நல்லது. இப்பொழுது எல்லாம் இந்த பயன்பாடு குறைவாக இருப்பதால் உதிரிப்பூக்களாகவே கடவுளுக்கு சேர்ப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear sir,

What is the special reason for


பிராமணர்கள் பூஜை செய்யாத அம்மன் கோவில.
Thanks

Antony