Followers

Saturday, November 23, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 88


ணக்கம் ண்பர்களே!
                                       ராகு தசாவை கண்டு பலர் பயம்கொள்கிறார்கள். பல பேர் எனக்கு இந்த தசா வராது என்றும் சொல்லுகிறார்கள். ஒரு சிலர் எனக்கு ராகு நல்ல இடத்தில் நன்றாக இருக்கின்றது சார் பிரச்சினை இல்லை நல்லது செய்யும் என்றும் சொல்லுகிறார்கள். அவர்அவர்களின் நம்பிக்கை, ராகு தசா நடந்தால் மட்டுமே தெரியும். நமது வேலை அனைத்தையும் சொல்லுவது மட்டுமே. அதனை படித்துவிட்டு உங்களுக்கு எப்படி ராகு தசா இருக்கும் என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம்.

ராகு தசா நடந்து முடிந்தவர்களுக்கு அந்த தசாவால் ஏற்பட்ட அனுபவம் இருக்கும். ராகு தசா அனுபவத்தை வைத்தே பல தத்துவங்களை எழுதுலாம். அனைவருக்கும் கெடுதல் செய்திருக்கிறது என்று சொல்லமுடியாது. கெட்ட பலனை கொடுத்தவர்களுக்கு நல்ல அனுபவமாக தான் அது இருக்கும். பொதுவாக இந்த தசாவை நடந்து முடிந்தவுடன் மனிதனுக்கு ஒரு ஏக்கம் இருக்கும். ஒரு நல்ல விசயம் நடப்பது போல் இருக்கும் ஆனால் அது நடந்திருக்காது. அதுவே ஒரு ஏக்கமாக இருக்கும்.

ஒவ்வொரு தசாவிலும் ஏக்கம் இருக்கதான் செய்யும் ஆனால் ராகு தசாவில் அந்த ஏக்கம் அதிகமாக இருக்கும். ஏன் என்றால் இழந்தது பெரிய விசயமாக இருக்கலாம். இழந்தது ஒவ்வொரு மனிதனை பொருத்து அது அமையும். காதலன் காதலியை இழந்திருக்கலாம். கணவன் மனைவியை இழந்திருக்கலாம். மகன் அப்பா அல்லது அம்மா இழந்திருக்கலாம். பணக்காரன் பணத்தை இழந்திருக்கலாம் .ஒவ்வொருவருக்கும் ஒரு இழப்பாக இருக்ககூடும்.

நான் ஏன் ராகு தசாவைப்பற்றி இத்தனை பதிவுகள் தருகிறேன் என்றால் ஒரு மனிதனை நல்ல பண்பு உடைய மனிதனாக மாற்ற இந்த மாதிரி தசாக்கள் தேவைப்படுகிறது. அப்பொழுது மட்டுமே அவன் நல்ல மனிதனாக உருவாகுகின்றான். ராகு தசாவிற்க்கு பிறகு வரும் குரு தசா அவனை மிகச்சிறந்த ஞானியாக அல்லது ஆன்மீகவாதியாக மாற்றிவிடுகிறது.

நல்ல பண்பு என்பது படித்தால் மட்டும் வந்துவிடாது. ஒருவனை போட்டு வாழ்க்கை அடிக்கும் அடியில் இருந்து தான் வரும். அது ராகு தசாவில் மாட்டியவர்களுக்கு தெரிந்திருக்கும்.ராகு தசாவில் ஒருவர் இருக்கிறார் என்றால் அவருக்கு சுயநலம் அதிகமாக இருக்கும். அப்படி சுயநலனுக்காக செய்ய போய் வசமாக மாட்டிக்கொண்டுவிடுவார். சுயநலனில் ஆப்பு வைக்கும்பொழுது அடுத்து வரும் குருதசா பொதுநலனுக்காக நான் வாழ்கின்றேன் என்று வாழவைத்துவிடும்.

நான் சந்திக்கும் ராகு தசா முடிந்தவர்கள் என்னிடம் பெருமூச்சு தான் விடுவார்கள். அவர்களிடம் நான் சொல்லும் வார்த்தை நீங்கள் இந்த பிறவியில் இருந்து விடுபடுவதற்க்கு தயாராகிவிட்டீர் என்று சொல்லுவது உண்டு. குரு தசாவை நன்றாக இவர்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக இவர்களால் மனிதபிறப்பை விட்டு செல்லமுடியும்.

ராகு தசா நல்லதை செய்யாது என்று சொல்லமுடியாது. பல நன்மைகளை பலருக்கு வழங்கி இருக்கின்றது. ஒரு சிலருக்கு பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து கூட வாரி வழங்கி இருக்கின்றது. அந்தந்த ஜாதகத்தை பொருத்து அது அமையும்.

ஒவ்வொரு ஜாதகத்தையும் நன்றாக ஆராய்ந்து ராகுக்கு தகுந்த பரிகாரம் செய்து அதனை நல்ல பலன் தருவதாக நாம் செய்யவேண்டும். எப்படி பார்த்தாலும் பதினெட்டு வருடங்கள் கெடுதல் செய்துக்கொண்டே இருக்கப்போவதில்லை. எப்படியும் ஒரு சில காலகட்டங்களில் நல்லது செய்யும். அதனை பயன்படுத்தும் விதமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டியது நமது வேலை.

ஜாதகத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டும் என்று இருக்கும். எவ்வளவு சம்பாதிப்போம் என்பது இருக்காது. நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலைப்பொருத்து அமையும். சரியான தேர்வு என்பது நமது கையில் தான் இருக்கின்றது. அதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் தகவல்கள் நமக்கு எளிதாக கிடைக்கின்றன். சோதிடத்தைப்பற்றி அனைத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். எப்படிபட்ட தோஷத்தையும் போராடி வெற்றி காண்பதற்க்கு வழி இருக்கின்றது. ராகு தசாவில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிப்பதைவிட நல்ல வழியை நாம் தேர்ந்தெடுக்கமுடியும்.

மக்கான குழந்தையை கூட நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து பெரிய படிப்பை படிக்கவைப்பதில்லையா அப்படி தான் இதுவும். எல்லாம் நம்பிக்கையோடு செய்யும்பொழுது ராகு தசா உங்களுக்கு நல்ல தசாவாக அமையும்.

இப்பொழுது ராகு தசாவைப்பற்றி படிக்கிறீர்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருப்பார்கள் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்துவிட்டு உங்களுக்கு இப்படி நடக்கிறது இதற்கு இப்படி செய்யுங்கள் என்று சொல்லுங்கள். அவர்களும் பிழைப்பார்கள் அல்லவா. பிறரை காப்பாற்றிய புண்ணியம் உங்களுக்கு சேரும். ஒரு ஏழைக்கு இந்த தகவலைப்பற்ற சொல்லும்பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கூட இருக்கலாம்.

ராகு தசா முடிந்துவிட்டது என்று நினைக்கவேண்டாம். தொடர்ந்து இன்னும் கொஞ்சநாள் இருக்கின்றது. ஒரு சில விசயங்களைப்பற்றி பார்த்துவிட்டு ராகு தசாவை முடித்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

varadu4ever said...

வணக்கம் ஐயா
ஜாதகத்தில் வர்கோத்தமம் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன. புத்தகத்தில் படித்தேன். அப்படி இருந்தால் சுப அமைப்பு என்று எழுதி இருந்தார்கள். விளக்கம் கொடுக்கவும் ஐயா

நன்றி
வரதராஜ்.

rajeshsubbu said...

வணக்கம் சோதிடம் பெரிய கடல் இப்பொழுது தான் உள்ளே நுழைந்து இருக்கின்றேன். கொஞ்சம் பொருங்கள் அனைத்தையும் பார்த்துவிடலாம்.