Followers

Saturday, November 23, 2013

அன்பான வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே!
                     பல நண்பர்கள் எனக்கு அவர்களின் வீட்டு விழாக்களுக்கு அழைக்கின்றார்கள். மிகவும் சந்தோஷமாக எனக்கு இருக்கின்றது அதே நேரத்தில் அந்த நாளில் உங்களை நான் வந்து சந்திக்கமுடியாத சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. 

ஒரு சிலர் அவர்களின் திருமண நாளில் கண்டிப்பாக வரவேண்டும்.என்கிறார்கள். அவர்களிடம் நான் உங்களை போல் பல பேர்கள் கஷ்டத்தில் இருக்கின்றனர் அவர்களுக்கு நான் உதவி செய்யவேண்டும் ஆகையால் நேரம் கிடைக்கும்பொழுது மற்றும் உங்களின் ஊர்களுக்கு வரும்பொழுது வருகிறேன் என்று சொல்லியுள்ளேன். உங்களுக்கும் இதனை தெரிப்பது மதித்து பத்திரிக்கை வைத்தோம் வரவில்லையே என்று நினைக்ககூடாது

உங்களின் வீட்டு விஷேசங்களை நல்ல நேரத்தில் வைத்தக்கொள்வது நன்று. அதிகப்பட்சம் வளர்பிறையில் விஷேசங்களை வைத்துக்கொள்ளுங்கள். பல பேர்கள் கெட்ட நேரத்தில் விஷேசங்களை வைக்கிறார்கள். வளர்பிறையாக உங்களின் வீட்டு விஷேசங்கள் இருக்கட்டும்.உங்களின் ஊர் பக்கம் வரும்பொழுது கண்டிப்பாக வருவேன்.

தேய்பிறை நாளில் விஷேசங்கள் வைப்பதாக இருந்தால் விடியற்காலை நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் வைத்துவிடுவது நல்லது.பிரம்மமுகூர்த்த்தில் நடைபெற்றால் எந்த வித பிரச்சினையும் இருக்காது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: