Followers

Sunday, November 3, 2013

அம்மனின் ஹோமம் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதககதம்பத்தின் வழியாக அம்மனின் ஹோமத்தை நடத்திக்கொடுத்து கொண்டிருக்கிறேன். இதில் ஒன்றைச்சொல்லவேண்டும் என்று இருந்தேன். இப்பொழுது மட்டுமே அந்த ஞாபகம் வந்தது.

ஒரு வீட்டில் ஹோமம் நடத்தும்பொழுது அந்த வீட்டில் கண்டிப்பாக சுபிட்ஷம் வரும். ஏதாவது ஒரு வழியில் உங்களுக்கு நல்லதை அம்மனின் ஹோமம் செய்துக்கொடுத்துவிடும். இதனை செய்யும்பொழுது உயிர் கண்டம் உங்களுக்கு இருந்தால் அம்மன் உங்களை காப்பாற்றிவிடும். இப்பொழுது அதிகம் பேர் என் மீது இருக்கும் நம்பிக்கையில் இந்த ஹோமத்தை நடத்தி கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். உங்களின் நம்பிக்கை இந்த ஹோமத்தை உங்களின் வீட்டில் நடத்துவதால் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

ஹோமத்தை நடத்தும்பொழுது அந்த வீட்டில் உள்ள சக்தியின் நிலை எனக்கு நன்றாக தெரிந்துவிடும். அந்த சக்தி என்ன கேட்கிறது என்றும் கூட தெரியும். உங்களின் குலதெய்வத்தை முன்நிறுத்தி தான் இதனை செய்கிறேன். உங்களின் குலதெய்வம் எதனை கேட்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு செய்துவிடுவது இந்த ஹோமத்தின் முக்கியமான ஒரு விசயமாக இருக்கும்.

ஹோமத்தை நடத்தும்பொழுது இடையில் யாரும் எந்ததொந்தரவும் செய்யகூடாது. அதனால் தான் வாடகை வீட்டில் இருப்பவர்களை முன்அனுமதி வாங்கி செய்யசொல்லுகிறேன்.

உங்களிடம் ஒன்றை முக்கியமாக தெரிவிக்க வேண்டும் என்று நினைத்த விசயம் இது தான் நீங்கள் வேறு எந்த சாமியாருடன் மற்றும் ஆன்மீகவாதியோடு தொடர்பு வைத்துக்கொண்டு இந்த ஹோமத்தை செய்துக்கொடுங்கள் என்று மட்டும் தயவு செய்து வரவேண்டாம். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: