Followers

Sunday, November 3, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 67


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசா இப்படி அதிகம் பிரச்சினை தரும்பொழுது எப்படி ராகு தசா ஒருவருக்கு பக்தி மார்க்கத்திற்க்கு இழுத்து செல்லும் என்று பல பேர்க்கு நினைக்க தோன்றும். யாரோ ஒருவராவது பக்தி மார்க்கத்திற்க்கு சென்று இருக்ககூடும் அது எதனால் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

மனிதன் பிறந்த நாளிலிருந்து ஏதோ ஒரு போதை அவனுக்கு தேவைப்படுகிறது. தாய்பால் கூட ஒரு வகை போதை தான். மனிதன் போதை இல்லாமல் இருக்கமுடியாது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான போதையிலேயே இருக்கின்றான். ஒரு வகையில் போதை தான் கடவுளின் நிலை என்று அவனது ஆத்மாவில் பதிந்துவிட்ட ஒன்றாக கூட இருக்கும்.

மது என்ற போதையில் விழுந்துவிடுகிறான். ராகு அதிகமாக மது போதையும் கொடுத்துவிடும். மது போதை உடலை கெடுக்கும். அந்த வழியிலும் கடவுளை அடையமுடியும் ஆனால் உடலை கெடுத்துவிடும் என்பதால் அதனை யாரும் பரிந்துரை செய்வதில்லை. ராகு ஒருவகையில் இப்படியும் பக்தி மார்க்கத்திற்க்கு இழுத்துவிட்டு செல்லகூடும் என்பதால் இருக்கலாம்.

ராகு நல்ல நிலையில் அமரும்பொழுது அதிகமான பக்தியை தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒரு சிலருக்கு ஒன்பதில் ராகு அமரும் அப்படி அமரும் ஜாதகர்கள் சிறந்த பக்திமான்களாக இருப்பார்கள். பல பேரை இப்படி பார்த்தது உண்டு. ஒருவருக்கு ஒன்பதில் ராகு அமரும்பொழுது அவரால் பல கோவில்களை கட்டமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: