Followers

Sunday, November 3, 2013

நல்ல செயல்


வணக்கம் நண்பர்களே!
                    வாழ்க்கையில் என்ன தான் பணம் பணம் என்று ஒடினாலும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தோம் என்று ஏதாவது ஒரு நல்லவிசயத்தையாவது செய்துவிட்டு செல்லவேண்டும். அது நமக்கு பிறகு வரும் மக்களுக்கும் அது பயன்படட்டும் என்று செய்யவேண்டும். இது ஒரு ஆத்மார்த்தமான செயலாக இருக்கும்.

நாம் பலபேர்களிடம் நேரில் சொல்லுவதை உங்களிடம் இன்று பதிவு வழியாக சொல்லுகிறேன். உங்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல தலைமுறையை உருவாக்க ஏதோ ஒரு நல்ல செயலை செய்யுங்கள். அது காலம் காலமாக இருப்பதுபோல் செய்தால் போதும்.

ஒரு சிலர் கோவில் கட்டுகிறார்கள். இதுவும் நல்ல செயல் தான் ஆனால் அதனை கட்டுவதோடு இல்லாமல் தினமும் பராமரிக்க வேண்டும். தினமும் ஒரு கால பூஜையாவது செய்வது போல் செய்துவிட்டால் நல்லது. அதற்கு என்று தனியாக பணத்தை ஒதுக்கிவைத்துவிடுவது நல்லது.

இன்று பல கோவில்களில் ஒரு காலபூஜை கூட செய்யமுடியாத நிலை உள்ளது. போதியவருமானம் இல்லாமல் இருக்கின்றது. உங்களின் ஊரில் அப்படி கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு உங்களால் முடிந்த உதவியை நீங்கள் செய்துக்கொண்டு வருவது நல்லது. எப்பேர்பட்ட தோஷமும் அடிப்பட்டு போய்விடும்.

உங்களின் வாரிசும் நன்றாக இருப்பார்கள். உங்களின் குலதெய்வ கோவிலை கூட அப்படி தேர்ந்தெடுத்து செய்துவருவது நல்லது. குலதெய்வ கோவிலை கூட நீங்கள் கட்டலாம். நீங்கள் இந்த பூமியில் வாழ்ந்தர்க்கான அடையாளம் போல் இருக்கும்.

என்ன செய்வீர்களா?

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: