Followers

Friday, November 22, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 87


ணக்கம் ண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ராகு சுக்கிரனோடு சேர்ந்து தசா நடைப்பெற்றால் அந்த ஜாதகருக்கு பெண்களால் பிரச்சினை வரும். எங்கு சென்றாலும் பெண் வம்பு வந்துவிடும். அதனால் மானக்கேடு உருவாகும். நீங்கள் சும்மா இருந்தால் கூட உங்களை தேடி பெண்கள் வருவார்கள்.

ராகு செவ்வாயோடு சேர்ந்து ராகு தசா நடைபெற்றால் சண்டை சச்சரவுக்கு பஞ்சம் என்பதே இல்லாமல் சண்டை வந்துக்கொண்டே இருக்கும். சகோதர்கள் வழியில் சண்டை சச்சரவு இருக்கும். அதிகமான காம எண்ணத்தை உருவாக்குவார். காவல் நிலையம் செல்ல வைத்துவிடுவார்.

ராகு சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து இருந்து ராகு தசா நடைபெற்றால் இது மிகவும் சிக்கலான ஒரு அமைப்பு. பெண்கள் வழியில் மிகப்பெரிய பிரச்சினை உருவாகி அதனால் காவல் நிலையம் சென்று சிறைக்கு செல்ல கூட வைத்துவிடும். 

எனக்கு தெரிந்த ஒரு டிரைவருக்கு இப்படி அமைந்திருந்தது.  அவர் ஒரு தகாத பெண்ணிடம் உறவு வைத்திருந்தார். அந்த பெண்ணிற்க்கும் இவருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டு அந்த பெண்ணை இவர் தாக்கிவிட்டார். கத்தியால் தாக்கிவிட்டார். அந்த பெண்ணை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து காப்பாற்றிவிட்டார்கள் ஆனால் அந்த நிகழ்வுக்காக இவர் 1 வருட காலம் ஜெயிலில் இருந்தார்.

ராகு சுக்கிரன் செவ்வாய் கூட்டணி மிகவும் பொல்லாதது. இவர்களே போய் வம்பில் மாட்டிக்கொள்வார்கள். ஏன் செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்று தெரியாமல் செய்துவிடுவார்கள். இப்படி உங்களுக்கு அமைந்திருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது

நண்பர்களே!
           பல நண்பர்கள் விடியற்காலையிலேயே ஜாதக கதம்பத்தை படிக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். காபி வித் ஜாதககதம்பம் இருக்கவேண்டும் என்கிறார்கள் அவர்களின் விருப்பத்திற்க்காக முடிந்தவரை காலையிலேயே  ஜாதககதம்பத்தில் பதிவு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Philosophies of Life said...

நானும் எத்தனையோ புத்தகங்கள், இணைய தளங்கள் , கட்டுரைகள் , தொலைகாட்சி நிகழ்சிகள் படித்து , பார்த்து விட்டேன். பொதுவாகவே ராகு தசை , கேது தசை என்றே சொல்கிறார்களே தவிர , ராகு சாரம் பெற்று 12ல் அமைந்த கிரகம் மற்றும் அந்த ராகு 1ல் (விருச்சிகத்தில்)இருந்து 12ல் அமைந்த கிரகத்தின் (புதன்) சாரம் பெற்ற கதையின் அவலத்தை ஒன்றிலும் பார்த்ததில்லை.