Followers

Wednesday, November 6, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 75


வணக்கம் நண்பர்களே!
                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம் அதில் பலவித கருத்துக்களைக்கொண்டு பார்த்து வந்தோம். ஒருவர் என்னிடம் சோதிடம் பார்க்க பல வருடங்களுக்கு முன்பு வந்தார். அவரின் ஜாதகம் எனக்கு இப்பொழுது மறந்துவிட்டது. நமது சேமிப்பில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்க்கு ராகு பதினொன்றில் இருப்பது மட்டும் நன்றாக தெரியும். அவர்க்கு கொடுத்த ஒரு கருத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லபோகிறேன்.

அவர் ஒரு வியாபாரி. அவருக்கு ராகு தசா ஆரம்பகாலத்தில் சுயபுத்தியில் தன்னுடைய மனைவியை இழக்க நேரிட்டது. மனைவியை இழந்து ஒரு வருடங்கள் சென்று பிறகு என்னை பார்க்கவந்தார்.அவரிடம் நான் சொன்னது உங்களுக்கு ராகு தசா ஆரம்பித்தவுடன் உங்களின் மனைவியை இழந்துவிட்டீர்கள். இழந்தது இழந்தது தான் அதனை நினைத்து ஒன்றும் நாம் செய்யபோவதில்லை நீங்கள் நினைத்தால் உங்களின் வாழ்க்கையை மிக உயர்ந்த இடத்திற்க்கு செல்லவைக்க முடியும் என்றேன். அவரும் சொல்லுங்கள் என்றார்.

நீங்கள் ஒரு பெண்ணை பார்த்த திருமணம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவருக்கு ஒரு குழந்தை இருந்தது. எப்படி இது சாத்தியப்படும் என்று கேட்டார். நீங்கள் செய்யுங்கள் என்று சொன்னேன். அவரும் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்தார். வந்த பெண் மகராசியாக வந்தார். அவர் வந்த நேரம் மிகப்பெரிய அளவில் இவர் வியாபாரத்தில் உயர்ந்தார். எப்படி உயர்ந்தார் என்றால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டார்.

எதனை வைத்து இவருக்கு திருமணம் செய்ய சொன்னேன் என்று சொல்லுகிறேன் பாருங்கள். பதினோராவது வீடு என்பது ஒருவருக்கு அமையும் சின்னவீட்டை காட்டும் இடம்.அந்த வீட்டில் ராகு அமர்ந்து இருக்கிறது. சின்ன வீடு செட்டப் செய்வதற்க்கு இதனை வீடு ஒரு தசா வேண்டுமா என்ன. என்ன ஒன்று என்றால் முதல் தாரம் இறந்துவிட்டது. இவர் இரண்டாவது மனைவியாக சென்றார். வாழ்வில் ராகு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் இப்படி செய்யவில்லை என்றால் இவருக்கு வளர்ச்சி இருக்காது.

ஒருவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும்பொழுது நாம் ஏழாவது வீட்டை மட்டும் பார்த்துக்கொண்டு பரிகாரம் செய்துக்கொண்டு இருக்ககூடாது. திருமணவாழ்வில் பிரச்சினை என்பது அதிகப்பட்சமாக ஆறாவது வீட்டில் இருந்து தான் உருவாகும். ஆறாவது வீட்டிற்க்கு ஆறாவது வீடு என்பது எதிரிக்கு எதிரி. எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் அல்லவா. பதினோராவது வீட்டை வைத்து நாம் வெற்றி பெறமுடியும்.

ஒரு வீழ்ச்சியே ஒரு வளர்ச்சியாக மாற்றமுடியும்.இவருக்கு முதல் திருமணத்தில் பிரச்சினையை ஏற்படுத்திய ராகு தசாவை நாம் வளர்ச்சியாக மாற்றினோம். ராகு பதினோராவது வீட்டில் இருந்து நடைபெறும்பொழுது நமக்கு சின்ன வீடு செட்டப் ஆகும். சின்ன வீடு வழியாக சம்பாதித்வர்கள் பல பேர் இருக்கிறார்கள்.நான் சொன்னேன் என்று நீங்களும் இப்படி இறங்கிவிடாதீர்கள். இது எல்லாம் ஆயிரத்தில் ஒருவருக்கு இப்படி நடக்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: