Followers

Thursday, November 14, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 79


வணக்கம் நண்பர்களே!
                     ராகு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். எனக்கு உறவினர் ஒருவருக்கு ராகு தசா நடந்தது அவரின் அம்மாவிற்க்கு புற்றுநோய் வந்தது. அந்த புற்றுநோய்க்கு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. முற்றிவிட்டது. புற்றுநோயின் தாக்குதலின் இறுதிவடிவம் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். 

புற்றுநோய் இறுதியில் அவர்கள் படும்பாடு அவ்வளவு கொடுரமாக இருக்கும். ராகு என்பது கண்ணிற்க்கு தெரியாது அல்லவா. வலியும் கண்ணிற்க்கு தெரியாது. வலியால் துடித்தார்கள். அப்படி ஒரு வலி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்படிப்பட்ட கல் நெஞ்சமாக இருந்தாலும் அவர்கள் படும் பாட்டைபார்த்து மனமிரங்குவார்கள்.

புற்றுநோய் இறுதியில் புற்றுநோயாளிகளை தனியாக விட்டுவிட்டு கூட ஒரு சிலர் சென்றுவிடுவார்கள். ஏன் என்றால் அவர்களை பார்க்கமுடியாது என்ற காரணததால் செல்லுகிறார்கள். பாவமான ஒரு காரியம் தான் இது. அதனை எல்லாம் ஒரு சாதாரண மனிதன் பார்த்தால் வாழ்க்கையில் பாவம் என்பதே செய்யவே மாட்டான்.

சரி சொல்ல வந்ததற்க்கு வருகிறேன். கடைசி நேரத்தில் படுத்தபடுகையாக இருக்கும் பொழுது உறவினர்கள் எல்லாம் அந்த நபரை சுற்றி இருக்கிறார்கள். விதி என்ன செய்தது தெரியுமா. அந்த புற்றுநோயாளியின் உடலில் எறும்பாக வந்து கடித்தது. அவர்களை சுற்றி ஆள் இருந்தும் அவர்களின் கண்களுக்கு படவில்லை. ஒரு நாள் சென்றபிறகு தான் கண்களுக்கு தெரிகிறது. ராகு என்பது எறும்பையும் குறிக்கும்.

ராகு அப்படியும் வேலை செய்து காட்டியது. முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு ராகுவின் கொடூர தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம்.ராகு தசா என்பது ஒரு சாதாரண விசயம் கிடையாது. நம்மை உரு தெரியாமல் அழித்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

ராகு தசையில் என்ன புத்தியில் அப்படி ஆனது என்று சொல்லுங்கள் அண்ணா..