Followers

Friday, November 29, 2013

பரிகாரம் செய்யும் பொழுது


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களுக்கு என்று ஒரு சில பரிகாரங்களை சொல்லுகிறோம். அப்படி அவர்களுக்கு சொல்லும்பொழுது சார் இதனை நாங்கள் ஏற்கனவே செய்து இருக்கின்றோம் என்று சொல்லுவது உண்டு.

நீங்கள் ஏற்கனவே இதனை செய்தாலும் நான் உங்களுக்கு சொல்லி செய்யும்பொழுது நமது அம்மன் உங்களுக்கு அதனை வழிநடத்திக்கொடுக்கும். பல பேர்க்கு இப்படி தான் பரிகாரம் வெற்றி அடைந்திருக்கின்றது. நீங்கள் ஏற்கனவே செய்யதாலும் நான் சொன்னபிறகு அதனை செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.

உங்களிடம் நான் சொல்லும் பரிகாரம் அனைத்து சோதிடர்களும் சொல்லுவது போல் தான் இருக்கும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் உங்களால் முடிந்தது அது மட்டுமே மந்திரங்களை நன்றாக கையாள தெரிந்தால் புது பரிகாரம் சொல்லலாம்.

உங்களால் மந்திரங்களை கையாளமுடியாத காரணத்தால் மட்டுமே வழக்கம்போல் பரிகாரத்தை சொல்லுகிறேன். நீங்கள் ஏற்கனவே எந்த ஒரு சோதிடரும் சொல்லி செய்யதாலும் நான் உங்களுக்கு சொன்னவுடன் ஒரு முறை செய்து பாருங்கள். வித்தியாசத்தை நன்றாக உணரலாம்.

நானாக பரிகாரம் உடனே செய்வதில்லை. ஏன் என்றால் நான் வந்தால் உங்களுக்கு செலவு அதிகம் ஆகும் என்பதால் இப்படி பரிந்துரைக்கின்றேன். நீங்கள் இப்படி செய்துக்கொள்வது நல்லது கண்டிப்பாக உங்களுக்கு நடக்கும். அப்படி நடக்கவில்லை எனும்பொழுது என்னை தொடர்புக்கொண்டு செய்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: