Followers

Saturday, November 16, 2013

காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திரம் செய்பவர்கள் என்னிடம் சொல்லும் ஒரு சில கருத்துக்களைப்பற்றி விளக்கவேண்டும் என்று பதிவை தருகிறேன்.

உங்களின் வீட்டில் இதனை செய்யும்பொழுது உங்களி்ன் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு பிடிக்காமல் இதனை செய்யவேண்டாம். பல இளைஞர்கள் தங்களின் வீட்டில் இதனை செய்யும்பொழுது அவர்களின் துணைவியார் பயம்கொள்வதாக என்னிடம் தெரிவித்தார்கள். 

சாமியாராக போய்விடுவார் என்று பயம்கொள்ளவதாக தெரிவித்தார்கள். நான் இதனை செய்யும் முன்பு நான் உங்களிடம் எந்த ஒரு கட்டுபாடும் நான் விதிக்கவில்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

நீங்களவே கட்டுபாட்டை விதித்துக்கொண்டு செய்தால் துணைவியார் என்ன செய்வார்கள். அவர்கள் சொல்லுவதும் சரி தானே. ஆன்மீகம் என்பது வெளிவேஷம் என்பது கிடையாது. உங்களின் மனதில் நடைபெறும் ஒரு மாற்றம் மட்டுமே. உங்களின் உடையில் மாற்றம் தேவையில்லை.

நீங்கள் இல்லறவாழ்வில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் என்றால் உங்களின் மனைவிக்கும் இதனை தெரியப்படுத்துக்கள். இப்படி எல்லாம் இருக்கின்றது என்று சொல்லுங்கள். உங்களின் மனைவிக்கு இதனைப்பற்றி தெரியப்படுத்தினால் அவர்களும் இதில் ஈடுபடுவார்கள். அவர்களிடம் இதனைப்பற்றி சொல்லுவதில்லை அப்புறம் எப்படி அவர்களுக்கு புரியும்.

நீங்கள் எதனை செய்தாலும் அதனைப்பற்றி உங்களின் மனைவியிடம் தெரியப்படுத்துங்கள்.அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.அவர்களும் உங்களுக்கு புதிய கருத்தை தருவார்கள்.நமது ஆன்மீகத்தில் பெண்களுக்கு தான் முதல் இடம் அதனை மறுக்காதீர்கள். அனைத்தையும் பகிர்ந்துக்கொள்ளும்பொழுது எப்படி அவர்கள் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

உங்களின் முன்னேற்றத்திற்க்கு தான் ஆன்மீகப்பயிற்சி எல்லாம் இருக்கவேண்டும். வெளியில் தெரிவது போல் ஆன்மீகத்தை வெளிப்படுத்தினால் அது அதன்வழியாக ஏதோ எதிர்பார்க்கிறோம் என்று அர்த்தம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: