Followers

Sunday, November 24, 2013

நம்பினால் நம்புங்கள்


ணக்கம் ண்பர்களே !
                     நம்பினால் நம்புங்கள் பகுதியை பார்த்து பல நாட்கள் சென்றுவிட்டது. இதனை பல நண்பர்கள் ஆவலுடன் படிப்பதும் இப்பொழுது தெரியவந்து இருக்கின்றது.

ஆன்மீக உலகத்தில் பல விசயங்கள் மறைமுகமாகவே வைத்திருக்கிறார்கள். அதனை வெளியில் சொல்லுவது கிடையாது. ஏன் இப்படி வைத்திருக்கிறார்கள் என்றால் அந்த விசயத்தின் உண்மை அதுவாகவே மறைந்துவிடும் என்பதற்க்காக இப்படி வைத்திருக்கலாம். 

தமிழ்நாட்டில் பல சித்தர்கள் இருக்கின்றனர் அவர்களின் பொக்கிஷங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள் அல்லவா. அது போல் பல பொருட்கள் மற்றும் இடங்களை கெட்டவர்களிடம் சேரக்கூடாது என்று மறைக்கப்பட்டு இருக்கின்றதை நான் ஒரு சில இடங்களில் பார்த்திருக்கின்றேன்.

இந்தியாவில் ஒரு இடம் இருக்கின்றது அது மலை உச்சியில் இருக்கின்றது. இரண்டு நாட்கள் பயணம் செய்தால் அந்த இடத்தை அடையமுடியும். இரண்டு நாட்கள் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்று. அடர்ந்த காட்டு பகுதியில் செல்லவேண்டும்.

மலையின் உச்சியில் ஒரு கல் ஒன்று இருக்கின்றது. கல்லில் பிரதிஸ்டை செய்து இருக்கின்றார்கள் ஒரு அம்மனை. அந்த அம்மனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு மணி வாங்கிக்கொண்டு மேலை செல்லும்பொழுது செல்லவேண்டும். அங்கு உள்ள மரத்தில் அந்த மணியை கட்டி அடித்தால் சிறிய நேரத்தில் நல்ல மழை பெய்யும்.  அந்த மழை தான் நமக்கு அம்மன் கொடுக்கும் ஆசீர்வாதம்.

நம்பினால் நம்புங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: