Followers

Thursday, November 14, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                     சோதிடத்தில் நாம் மிகப்பெரிய கிரகங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வோம். சனி கிரகம் குரு கிரகம் அதைவிட்டால் ராகு கேது இந்த நான்கு கிரகத்தை தாண்டி அடுத்த கிரகத்திற்க்கு ஒருவரும் செல்வதில்லை.

வியாபாரத்திற்க்கு என்று நமது தளம் வழியாக உதவி செய்து வருவது உங்களுக்கு தெரிந்ததே அதில் நாங்கள் அதிகமாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் கிரகம் எது என்றால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். 

நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரகம் புதன் சுக்கிரன் மற்றும் செவ்வாய். இந்த மூன்று கிரகங்களையும் நாங்கள் பிடித்தால் போதும் ஒரு மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அனைத்தையும் பெற்றுக்கொடுத்துவிடும்.

சுக்கிரனையும் புதனையும் ஆட்டிவைப்பது எளிதான ஒரு காரியமாக இருக்கும். செவ்வாய் கிரகத்தை வைத்து வேலை வாங்குவது இருக்கின்றதே நமக்கு பெரிய சவாலான ஒரு விசயமாக தான் இருக்கும். அதிலும் வெற்றி காண்பது என்பது ஒரு தில்லான அனுபவம்.

மூன்று கிரகங்களையும் ஒவ்வொன்றாக வேலை செய்வோம். அப்படி ஒவ்வொரு கிரகத்தையும் வேலை செய்யும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை தரஆரம்பிக்கும். ஒவ்வொன்றையும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்துவிட்டு அடுத்த அடுத்த கிரகத்தையும் வேலை செய்ய வைப்போம்.

நீங்கள் இந்த மூன்று கிரகத்தையும் எனக்கு தெரிந்தவரை கண்டுக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மூன்று கிரகங்கள் தான் எங்களை வாழவைக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: