Followers

Saturday, November 30, 2013

காயத்ரி மந்திர பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                     காயத்ரி மந்திரப்பயிற்சியைப்பற்றி நமது ஜாதககதம்பத்தில் எழுதிவருவதில் இருந்து பல நண்பர்கள் இதனை செய்துவருகிறார்கள். இப்பொழுது வளர்பிறை ஆரம்பிப்பது முன்னால் பல பேர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுவருகிறார்கள். அந்தளவுக்கு ஈடுபாட்டோடு என்னை தொடர்புக்கொள்வதற்க்கு முதலில் அவர்களுககு நன்றி சொல்லவேண்டும். 

காயத்ரி மந்திரத்தை பல ஆண்டுகளாக பல பேர் செய்துவருகிறார்கள். அதனைப்பற்றி நமது ஜாதககதம்பத்தில் சொன்னவுடன் பலர் முன்வந்து நானும் செய்கிறேன் எனக்கு சொல்லி தாருங்கள் என்று கேட்டார்கள். என் மீது உள்ள நம்பிக்கையில் கேட்கிறார்கள். நானும் சொல்லி தருகிறேன். 

நான் எப்படி இதனை கற்று வந்தேனோ அதனைபோல் தான் உங்களுக்கு காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொடுக்கிறேன். இதில் நமது அம்மனின் பங்கு அதிகமாக உங்களுக்கு இருக்கும். மிகப்பெரிய சக்தி உங்களுக்கு கிடைக்கிறது என்பதை மறக்காதீர்கள்.

காயத்ரி மந்திரம் செய்பவர்கள் வரும் 5/12/2013 வியாழக்கிழமையில் இருந்து தொடங்கலாம். குருவின் நாளான வியாழக்கிழமை அன்று தொடங்குவது நல்லது. காயத்ரி மந்திரத்தைப் பயிற்சி புதிதாக தொடங்குபவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

காயத்ரி மந்திர பயிற்சி என்றவுடன் ஏதோ தனியாக வகுப்பு நடத்துவார்கள் என்று நினைக்காதீர்கள். உங்களின் வீட்டில் நீங்கள் செய்யும் ஒரு பயிற்சி மட்டுமே. என்னிடம் இருந்து தகவல் மட்டும் கிடைக்கும்.

மேலே இருக்கும் காயத்ரி தேவி அம்மன். சென்னை காளிக்காம்பாள் கோவிலில் இருக்கும் காயத்ரி தேவி இது. நெட்டில் தேடியபொழுது கிடைத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Unknown said...

வணக்கம் நான் காயத்திரி மந்திர பயிர்ச்சி பல மாதங்களாக நீங்கள் சொன்னது போல செய்தேன் ஆனால் எந்த மாற்றமும் எற்படவில்லையே ?

rajeshsubbu said...

வணக்கம் இதற்கு பதிலை தனிபதிவாக தருகிறேன்.
படித்துபாருங்கள்.

rajeshsubbu said...
This comment has been removed by the author.